சேனைக்கிழங்கு.. நீங்க கருணைக்கிழங்கு சாப்பிடறீங்களா? அப்ப இதை மறக்காதீங்க.. பெண்ணின் அருமருந்து சேனை

307 0

சென்னை:

பெண்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் உடலில் காணப்படும் ஒரு பாலியல் ஹார்மோன் ஆகும். பெண்கள் பூப்பெய்தும்போது, ஏற்படும் மாற்றங்களுக்கு இந்த ஹார்மோன் மிகப்பெரிய காரணமாக உள்ளது..சேனைக்கிழங்கு.. நீங்க கருணைக்கிழங்கு சாப்பிடறீங்களா? அப்ப இதை மறக்காதீங்க.. பெண்ணின்  அருமருந்து சேனை | Do you know Excellent Health Benefits of Elephant Yam and  ...

ஹார்மோன்:

இந்த ஹார்மோன் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், அது பெண்களின் உணர்வுகளை பெரிதும் பாதிக்கிறது. எனவே, பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்க வேண்டும்.

சரியான மாதவிடாய் ஏற்படவும், இனப்பெருக்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும், இந்த ஈஸ்ட்ரோஜன் தேவையாக உள்ளது.. சிலருக்கு இந்த ஈஸ்ட்ரோஜன் மிகவும் குறைவாக இருக்கும். இதற்கு சில வகை உணவுகள் கைகொடுத்து உதவுகின்றன.

சோயாக்கள்:

அதில், முக்கியமானது சோயா தயாரிப்புகளாகும்.. காணரம், இந்தவகையான சோயாக்களில் காணப்படும் சேர்மங்கள், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க செய்கிறது.. ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவாக இருந்தால், சோயா மில்க், சோயா தயிர், டோஃபு மற்றும் சோயா கோதுமை மாவு போன்ற சோயா தயாரிப்புகளை சேர்த்து கொள்ளலாம்.

அதேபோல, எள் விதைகளும், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது.. காரணம், இந்த விதைகளில் லிக்னான்ஸ் நிறைந்திருக்கின்றன.. அந்தவகையில், போஸ்ட்மெனோபாஸ் பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க இந்த விதைகள் பேருதவி புரிகின்றன. இதில், கொண்டைக்கடலையையும் சேர்த்து கொள்ளலாம்.. சிவப்பு பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவற்றையும் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.

சேனைக்கிழங்கு:

கிழங்கு வகைகளில், சேனைக்கிழங்கில் அதாவது கருணைக்கிழங்கில் இந்த ஈஸ்ட்ரோஜன் கிடைக்கிறது.. கிழங்கில் சிறந்தது கருணை என்பார்கள்.. இந்த சேனைக்கிழங்கில் இருந்துதான், மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கிறார்கள்.. வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு, இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்குமாம்.

எனவே, பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகள் கட்டாயம் நீங்கும்.. வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை தடுக்கிறது.

மெனோபாஸ்:

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலத்தை தருகிறது. பெண்களின் வெள்ளைப்பாடு தொந்தரவுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளைக் கூட கட்டுப்படுத்தும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்துகிறது.

அதேசமயம், ஆஸ்துமா நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள், கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். அல்லது மருத்துவர்களின் அனுமதியை பெற்றே சாப்பிட வேண்டும்.

Related Post

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – டிடிவி தினகரன்

Posted by - May 20, 2024 0
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின்…

உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?

Posted by - February 19, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீபநாட்களாக பொதுமக்களுக்கு இருமல்,…

Selfie Video எடுத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் சத்தம், வெளியான தரமான வீடியோ!

Posted by - December 30, 2023 0
#NellaiWelcomesTHALAPATHY pic.twitter.com/oxXyD3SuJr — RAJA S (@Raja01_Tvk) December 30, 2023 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை…

”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

Posted by - April 8, 2025 0
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *