சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்

233 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு தினேஷ், முகேஷ் என 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தினேஷ் கர்னூலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண் | Woman  conducts cremation of dead husband at home in Andhra

முகேஷ் கனடா நாட்டில் டாக்டராக உள்ளார். ஹரிகிருஷ்ண பிரசாத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்தார். கணவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாக மகன்களுக்கு லலிதா தெரிவித்தார். ஆனால் மகன்கள் யாரும் தந்தையை பார்க்க வரவில்லை.

மகன்கள் தங்களை வந்து பார்க்கவில்லையே என கணவன்- மனைவி இருவரும் மனவேதனை அடைந்தனர். இந்த நிலையில் ஹரிகிருஷ்ண பிரசாத் நேற்று காலை இறந்தார். தந்தை இறந்தது குறித்து மகன்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் சொத்துக்காக சண்டை போடுவார்கள் என லலிதா கூறாமல் விட்டுவிட்டார்.

உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கவில்லை. இறந்து போன கணவரின் உடலையே பார்த்துக் கொண்டே இருந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த அட்டைப்பெட்டிகள், பழைய புத்தகங்கள் மற்றும் துணிகளை எடுத்து வந்து கணவர் உடல் மீது போட்டு தீ வைத்து எரித்தார்.

வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஹரிகிருஷ்ண பிரசாத் உடல் எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தீயை அனைத்து ஹரி கிருஷ்ணா பிரசாத்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள்

Posted by - August 12, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.…

முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

Posted by - August 10, 2024 0
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில்…

முதலிரவில் குழந்தை பெற்ற மணப்பெண்- கனவுகளோடு காத்திருந்த கணவன் அதிர்ச்சி

Posted by - June 30, 2023 0
ஆயிரம் பொய் சொல்லி யாவது திருமணத்தை நடத்த வேண்டும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ற பழமொழி உள்ளது. இந்த பழமொழிகளை நிரூபிக்கும் வகையில் இளம்…

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயம் என பேச்சு- பவன் கல்யாணுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Posted by - July 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:- ஆந்திராவில் கடந்த 4…
Generated Image February 25 2026 4 32PM

இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!”

Posted by - February 25, 2026 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார். “நல்லகண்ணு உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *