டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ – முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்

191 0

டிட்வா புயலால் சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலெர்ட் விடுத்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர செயல்பாட்ட மையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிட்வா புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் கூறியது என்ன.?

ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில், “வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில், தெற்கு பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ரெட் அலெர்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதனால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடர்பு கொண்டோம்“ என தெரிவித்தார்.

மேலும், “ஏற்கனவே, நேற்றைய தினம் இதுகுறித்து என்னுடைய தலைமையில், தலைமைச் செயலாளர் முன்னிலையில், உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி, உரிய அறிவுரை வழங்கியிருக்கிறோம்“ எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அதோடு, எல்லா மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், அனைவரும் அவரவர்களுக்கு உரிய மாவட்டங்களுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

மேலும், எந்த இடத்திலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சரின் எக்ஸ் தள பதிவு

இதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை போட்டுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அந்த பதிவில்,

“#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.“ என்று கூறியுள்ளார்.

 

Related Post

“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Posted by - November 13, 2024 0
அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார். அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன்…

வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி.. கல்லீரலின் நண்பன் நன்னாரி வேர்கள்

Posted by - November 25, 2023 0
சென்னை: ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய…

”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

Posted by - December 27, 2022 0
செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன் நம்மை விரட்டியே…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Posted by - September 2, 2024 0
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து சுவாமி, அம்பாள்…

”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

Posted by - October 27, 2025 0
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *