மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு?

108 0

மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல், எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தகவல்கள் பரவிய நிலையில், அடுத்த சில நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவி வருகிறது.

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் ஏற்படும் அசாதாரண சூழலை கையாளும் பொருட்டு மாநில முதலமைச்சர்களுடம் பிரதமர் மோடி நாளை (மார்ச் 27) ஆலோசனை நடத்துகிறார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மாதத்தை இந்த போர் நெருங்கியுள்ள நிலையில், இதனால் உலக நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கையாள மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த தகவலை மறுத்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு போல விரைவில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நேரலாம் எனவும், இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இப்படியான நிலையில் மேற்கு ஆசிய மோதல் தொடர்ந்து நீடித்தால் ஏற்படும் அசாதாரண சூழலை கையாளும் பொருட்டு தயார் நிலை மற்றும் திட்டங்களை உருவாக்க  பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 27) மாலை காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள மாநில முதலமைச்சர்கள் மட்டும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தலைமை செயலாளர்கள் பங்கேற்க உள்ளார்கள் என சொல்லப்படுகிறது.

Related Post

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

Posted by - August 7, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில்…

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்

Posted by - December 13, 2023 0
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…

என்னது UPIயில் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல்மாற்றம்

Posted by - March 29, 2023 0
இந்த கட்டணம் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI/Wallet கட்டணங்களை…

வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி

Posted by - July 13, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *