டேட்டிங் ஆப் மூலம் உடலுறவுக்கு அழைப்பு: வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல் கைது

231 0

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆன்லைன் செயலி மூலம் உல்லாசத்திற்கு அழைப்பு.. வீடியோ எடுத்து பணம் பறித்த  கும்பல் கைது.! - Seithipunal

இந்த கும்பல் Blued என்ற தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப்-ல் போலி ஐடி உருவாக்கி, நட்பு அடிப்படையில சாட் செய்வார்கள். பின்னர், தன்பாலின உடலுறவில் விருப்பம் உள்ளதா? எனக்கேட்பார்கள். அப்படி விருப்பம் இருக்கிறது என சாட் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்தால், அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்வார்கள். அப்படி வரும்போது, அவர்ளுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். அதை மற்றொருவர் மூலம் வீடியோ எடுத்துக் கொள்வார்கள்.

உடலுறவு முடிந்ததும், அந்த நபரிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துவிடுவார்கள். மேலும், உடலுறவில் ஈடுபட்டதை வீடியோவாக படம் எடுத்து வைத்துள்ளோம். அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டல் விடுத்து பணம் பறித்துக்கொள்வார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் போலீசார் புகார் அளிக்க, அதன்அடிப்படையில் போலீசார் இந்த மோசடி கும்பலை பிடித்துள்ளது. போலீசார் விசாரணையில் மேற்கொண்ட விசயங்கள் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து போலீசார் ஐநது செல்போன்கள், லேப்டாப், 9 ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Post

ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

Posted by - July 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல்…

அதள பாதாளத்தில் பங்குச் சந்தை.. மாஸ் காட்டிய ஐடி பங்குகள்!

Posted by - August 3, 2024 0
மிகவும் மோசமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் இன்று பங்குச் சந்தை பெரிய சரிவை செய்துள்ளது. நாளின் முடிவில் சென்செக்ஸ்-நிஃப்டி ஒவ்வொன்றும் 1%க்கும் அதிகமாக சரிந்தன. ஐடி மற்றும்…

இருபிரிவினர் இடையே திடீர் மோதல் – அரியானாவில் 144 தடை உத்தரவு அமல்

Posted by - August 1, 2023 0
கவுகாத்தி: அரியானா மாநிலம் குர்கான் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில்…

மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

Posted by - July 3, 2023 0
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால்…
rfseff4b

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Posted by - April 17, 2026 0
தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *