தவறான பழக்கம்; கார்த்திக் திருமணத்தால் நடிகை ஒருவர் விஷம் குடித்தார்: தயாரிப்பாளர் பாலாஜி பிரபு!

247 0

நடிகர் கார்த்திக் தனது செயல்பாடுகளால் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையை இழந்தார் … ஒரு நடிகை தற்கொலைக்கு முயன்றதாகவும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்தவர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, கிழக்கு வாசல், பொன்னுமணி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி என்று மாஸான படங்களில் நடித்தார்.

நடிகர் மட்டுமின்றி ஒரு பாடகராகவும் திகழ்ந்தார். வெத்தல போட்ட சோக்குல, கதை சொல்லபோறேன், கோழி கறி கொண்டு வரட்டா, ஹரிச்சந்திரன் வரான் என்று சில பாடல்களை பாடி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்தநிலையில் தான் நடிகர் கார்த்திக் பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அறம் நாடு என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.இயக்குநர் பாசில் இயக்கத்தில் கார்த்திக், குஷ்பு, விகே ராமசாமி, சார்லி, ஜனகராஜ், பேபி ஷாலி ஆகியோர் பலர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் வருஷம் 16. கிழக்கு வாசல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம். இந்தப் படம் மட்டுமின்றி பாண்டியநாட்டு தங்கம் கார்த்திகை தலைமீது தூக்கி கொண்டாட செய்தது. இந்தப் படம் நீண்ட நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலில் இடம் பெற்றது.

சினிமாவுக்கு வந்த பிறகு எல்லோருக்கும் இருக்கும் பழக்கம் இவருக்கும் இருந்தது. தவறான பழக்கத்திற்கு அடிமையானார். ஒரு காலத்தில் சிறப்பான நடிகராக இருந்த கார்த்திக் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி ஆரம்பித்த போது அவரது மாநாட்டிற்கு தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கார்த்திக் பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் கட்சி மீட்டிங்கிற்கு செல்வார். தென் மாவட்டம் முழுவதும் டிராவல் செய்தார். இதற்காக அவருக்கு தங்க ரூம் போட்டு கொடுப்பார்கள். ஆனால், அவர் நைட் முழுவதும் மது அருந்திவிட்டு காலையில் எழுந்திருக்க முடியாமல் தவிப்பார். அரசியல் மீட்டிங்கிற்கும் அவரால் வர முடியாது. இதே போன்று தான் ஷீட்டிங்கிற்கும் உரிய நேரத்திற்கு வர மாட்டார். அவரது தவறான பழக்கத்தால் சினிமாவில் மார்க்கெட் இழக்கும் நிலை வந்தது. கார்த்திக்கை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் அழைத்து அவரையும், அவரது கட்சியையும் பாராட்டி பேசினார்.

இப்படி பல சிறப்புக்கள் கொண்ட இவர் சில நடிகைகளிடமும் சிலுமிஷத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் இவருக்கு திருமணம் ஆன தகவலை தாக்கி கொள்ள முடியாத ஒரு நடிகை தன்னுடைய உயிரையே மாய்த்து கொள்ள விஷம் அறிந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். அந்த நடிகை யார் என்பது இப்போது பல ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இப்படியெல்லாம் பல சிக்கல்களை சந்தித்தவர் நடிகர் கார்த்திக். இதற்கெல்லாம் காரணம் அவரது தவறான பழக்கம் தான். சினிமா முதல் அரசியல் வாழ்க்கை வரை எல்லாவற்றையும் இழந்தார் என்று கூறியிருக்கிறார்.

Related Post

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் பரவிவருகிறது

Posted by - May 16, 2023 0
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத்…

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை

Posted by - July 22, 2023 0
துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி…

சூர்யா கொடுத்த வாய்ப்பில் வசூல் மன்னனாக மாறிய விஜய்.. பிரபல தயாரிப்பாளர் பேச்சு

Posted by - February 29, 2024 0
தளபதி விஜய் விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்.. கதாநாயகி யார் தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பிரதீப் ரங்கநாதன் இளைஞர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் 2018 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *