திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

233 0

ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்ததுதிருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து  கிடந்த புதுமணத் தம்பதி | Tamil News Chhattisgarh Newly married couple found  dead with stab wounds before wedding reception

அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற நிலையில், புதுமணத் தம்பதி தங்கள் வீட்டு அறையில் தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த அறையில் இருந்து மணப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் ஓடிச்சென்றார்.

உள்புறம் தாழிடப்பட்டிருந்த அந்த அறைக்கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் அவரும், மற்றவர்களும் அறை ஜன்னல் வழியே உள்ளே பார்த்தனர். அப்போது அறைக்குள் மணமகனும், மணமகளும் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மணமகனும், மணமகளும் உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடம்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

புதுமண ஜோடியின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து ஒரு கத்தியையும் கைப்பற்றினர். ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக புதுமணத் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் மணமகளை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, மணமகன் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Post

‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை – ஆனால்…

Posted by - June 13, 2025 0
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விழுவதற்கு சற்று முன்னர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே‘ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் என்ன…

பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த டாக்டர்கள்- ஒரு வருடத்திற்கு பிறகு அகற்றம்

Posted by - April 19, 2023 0
திருப்பதி: மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள்…

மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர் ரூ.10 லட்சம்வரை கடனுதவி அறிவிப்பு!

Posted by - August 17, 2024 0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

மணிப்பூரில் பாதுகாப்பு வீரர்கள்- துப்பாக்கி ஏந்திய கும்பலுக்கு இடையே கடும் சண்டை

Posted by - September 8, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *