திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

213 0

ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்ததுதிருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து  கிடந்த புதுமணத் தம்பதி | Tamil News Chhattisgarh Newly married couple found  dead with stab wounds before wedding reception

அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற நிலையில், புதுமணத் தம்பதி தங்கள் வீட்டு அறையில் தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த அறையில் இருந்து மணப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் ஓடிச்சென்றார்.

உள்புறம் தாழிடப்பட்டிருந்த அந்த அறைக்கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் அவரும், மற்றவர்களும் அறை ஜன்னல் வழியே உள்ளே பார்த்தனர். அப்போது அறைக்குள் மணமகனும், மணமகளும் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மணமகனும், மணமகளும் உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடம்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

புதுமண ஜோடியின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து ஒரு கத்தியையும் கைப்பற்றினர். ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக புதுமணத் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் மணமகளை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, மணமகன் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Post

BSNL வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய IFTV திட்டம் – 600+ Live TV சேனல்கள், 75 Mbps இணைய வேகம்!

Posted by - December 15, 2025 0
BSNL (Bharat Sanchar Nigam Limited) தனது FTTH (Fiber To The Home) வாடிக்கையாளர்களுக்காக IFTV (Intranet Fiber TV) என்ற புதிய வசதியை அறிமுகம்…

முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்குகளை வழங்கும் ரயில்வே நிறுவனம்….. ஜூலை 31ம் தேதி இறுதி முடிவெடுக்கும் RITES

Posted by - July 30, 2024 0
முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு மட்டும் இல்லாமல் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவு, இடைக்கால டிவிடெண்ட் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது.…

ஜி20 மாநாடு எதிரொலி – பாதுகாப்பு பணியில் 1.30 லட்சம் போலீசார்

Posted by - September 8, 2023 0
புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு

Posted by - July 29, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி…

இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

Posted by - December 20, 2023 0
மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *