Generated Image November 20 2025 10 58AM

நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக

206 0

#aiadmk #dmk #tamilnadu #admk #mkstalin #bjp #eps #ops #tn #politics #tamil #congress #chennai #edappadipalaniswami #periyarist #chiefminister #tamilcinema #puratchithalaiviamma #jayalalitha #amma #seeman #puratchithalaivi #modi #tamilpolitics #mla #actress #opanneerselvam #misschennai #mp #tamilpoliticsmeme

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கியுள்ள நிலையில், கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

நெருங்கும் தேர்தல் – களத்தில் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுக களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியையும் ரகசியமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதா.? அல்லது புதுமுகத்திற்கு வாய்ப்பா.? என ஆராய்ந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேரளாவில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு அசத்தியுள்ளார்.

கேரளா தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

கேரளாவில் வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள மாநிலத்தில் 9.12.2025, 11.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கீழ்க்காணும் பதவிகளுக்கு வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் மாவட்டம்

திருவனந்தபுரம் மாநகராட்சி 98-ஆவது வார்டு- S. வெங்கடேஷ்பாபு

நெய்யாற்றிங்கரா சட்டமன்றத் தொகுதி:
நெய்யாற்றிங்கரா நகராட்சி 14-ஆவது வார்டு-  K. கலா

இடுக்கி மாவட்டம்

தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி,மறையூர் ஊராட்சி 3-ஆவது வார்டு -சனில்
4-ஆவது வார்டு- செல்வி கணேசன்

மூணார் ஊராட்சி 13-ஆவது வார்டு- K. பவுன்ராஜ்
18-ஆவது வார்டு- P.K. முருகன்
தேவிகுளம் ஊராட்சி 14-ஆவது வார்டு- K. முருகையா
15-ஆவது வார்டு- R. கிட்னம்மா
வட்டவடை ஊராட்சி 4-ஆவது வார்டு- R. சத்தியா
சின்னகானல் ஊராட்சி 4-ஆவது வார்டு- A. உதயகுமார்
11-ஆவது வார்டு- R. மல்லிகா

பீர்மேடு சட்டமன்றத் தொகுதி

குமிழி ஊராட்சி 22-ஆவது வார்டு-P. எஸ்தர்
பீர்மேடு ஊராட்சி 2-ஆவது வார்டு-C.M. ஜாக்சன்

இடுக்கி மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள்:

2-ஆவது வார்டு- M. செல்லதுரை
3-ஆவது வார்டு- S. துரைப்பாண்டி

பாலக்காடு மாவட்டம் : சித்தூர் சட்டமன்றத் தொகுதி

வடகரப்பதி ஊராட்சி 10-ஆவது வார்டு- வல்சம்மா

11-ஆவது வார்டு- K. கலாதரன்

நெம்மாரா சட்டமன்றத் தொகுதி

நெம்மாரா ஊராட்சி 2-ஆவது வார்டு- N. தேவதாஸ்
9-ஆவது வார்டு- H. லத்தீப்
22-ஆவது வார்டு- A. செல்வராஜ்

மன்னார்காடு சட்டமன்றத் தொகுதி

அகழி ஊராட்சி 5-ஆவது வார்டு- பழனி
6-ஆவது வார்டு- சுருதி
12-ஆவது வார்டு-M. தீபா
புதூர் ஊராட்சி 14-ஆவது வார்டு- J. பிரின்சி
சோலையூர் ஊராட்சி 4-ஆவது வார்டு- N. சுப்பிரமணியன்

கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் ஒன்றிணைந்து, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில், சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Post

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

அதிமுக ஆட்சியை விமர்சிக்க பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி வேண்டும் : பழனிசாமி ஆவேசம்!

Posted by - December 3, 2022 0
  அதிமுக ஆட்சியை விமர்சிக்க தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக…

தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா

Posted by - May 30, 2025 0
 ராமதாஸ் நிறுவிய பாமக கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக கட்சியை அன்புமணி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக உதவகூடும்…

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது…

Posted by - February 21, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, விளம்பர ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் திமுக, மீண்டும் ஒரு முறை, வாக்களித்த மக்களை பட்ஜெட் மூலம் நட்டாற்றில் நிறுத்தி உள்ளதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *