vijay tour

TVK Vijay: வேளாங்கண்ணி டூர் கேன்சல்.. விஜய் சம்பவம்..

26 0

விஜயை காண நேற்றிரவு முதல் பொதுமக்கள் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு படையெடுத்தனர். புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிகாலை திருப்பலி நடக்கும்போது விஜய் வராமல் இருந்ததால் குழப்பமடைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேளாங்கணிக்கு இன்று வருகை தர இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்

கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் 85.10% ஆக உயர்ந்தது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை ஆகியவை வாக்கு சதவிகிதம் உயர காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், சசிகலா- ராமதாஸ் கூட்டணி, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி என பலமுனை போட்டி நிலவியது.

இதில் முதல்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 231 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளார். சேலம் எடப்பாடி தொகுதியில் மட்டும் வேட்பாளர் செய்த சதியால் கடைசியில் சுயேட்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்கு விஜய் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த கட்சியின் வாக்கைப் பிரிக்கப் போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளிலும் தவெக பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது.

விஜயின் திடீர்ஆன்மிகபயணம்

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ஒன்றரை மாத தேர்தல் பரப்புரை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கொடைக்கானலுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு துபாய்க்கும் சென்று ஓய்வு எடுத்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்தார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். தொடர்ந்து ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் இன்று அதிகாலை நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நாகூர் தர்கா செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது.

விடிய விடிய குவிந்த மக்கள் ஏமாற்றம்

இந்த நிலையில் விஜயை காண நேற்றிரவு முதல் பொதுமக்கள் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு படையெடுத்தனர். புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிகாலை திருப்பலி நடக்கும்போது விஜய் வராமல் இருந்ததால் அங்கு வருகை தந்த இளைஞர்கள், பெண்கள் என பலரும் TVK என கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழிபாட்டுக்கு இடையூறின்றி அமைதி காக்க பேராலயம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விஜய் பயணம் ரத்து செய்யப்பட்டால் அனைவரும் ஏமாற்றமடைந்தனர். பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு விஜய் செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

Related Post

Gemini Generated Image 6nw0d46nw0d46nw0

அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? – முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்

Posted by - April 18, 2026 0
மேட்டூர் அணை உபரிநீரில் இருந்து 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் சங்ககிரியில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி…
Generated Image January 23 2026 11 16AM

இன்று தமிழகம் வரும் மோடி.!

Posted by - January 23, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே…
qwefghm

’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்

Posted by - March 17, 2026 0
உள் பாவாடை கிடையாதா? சிவி சண்முகத்தை அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடைபெற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்,…
Generated Image November 13 2025 5 02PM

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - November 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *