மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன… அமைச்சர் மா.சுப்ரமணியன்

209 0

தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் H1N1 இன்புளுயன்சா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல் பற்றிய அச்சம் வேண்டாம் என்றும், தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது மக்களை அச்சுறுத்தி வருகிறது இன்புளுயன்சா காய்ச்சல். இந்த காய்ச்சலில், இன்புளுயன்சா ஏ H1N1, இன்புளுயன்சா ஏ H3N2, இன்புளுயன்சா பி விக்டோரியா என 3 வகைகள் உள்ளன.

மார்ச் 9ஆம் தேதி வரை, நாடு முழுவதும் 3,038 பேருக்கு H3N2 உள்ளிட்ட இன்புளுயன்சா வகை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் ஜனவரியில் 1,245 பேருக்கும், பிப்ரவரியில் 1,307 பேருக்கும் மார்ச் மாதத்தில் 486 பேருக்கும் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதி வரை, 955 பேருக்கு இன்புளுயன்சா ஏ H1N1 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 545 பேர் பேருக்கும், மகாராஷ்டிராவில் 170 பேருக்கும், கேரளாவில் 42 பேருக்கும், பஞ்சாப்பில் 28 பேருக்கும் பாதிப்பு இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பின்பற்றியபோது போன்ற தடுப்பு வழிமுறைகளை தற்போது கடைபிடிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் முகாம்களை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம், 2,663 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்புளுயன்சா பாதிப்பு உள்ளவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு இன்புளுயன்சா ஏ H1N1 பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தேவையான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post

க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்க? இந்த பொருளோடு சேர்ந்து குடிச்சா உங்க ஆரோக்கியம் செமையா இருக்குமாம்

Posted by - December 25, 2023 0
கோவிட்-19 வகை JN.1 இன் புதிய திரிபு உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை…

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் புதுவித வைரஸ் காய்ச்சல்

Posted by - February 22, 2023 0
சென்னை: சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே…

“இங்கு பாம்புதான் அரசியல்… ஆனால் நான் பயப்படமாட்டேன்..” – தவெக மாநாட்டில் விஜய் சொன்ன காரணம்!

Posted by - October 28, 2024 0
அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட். “இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை…

கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

Posted by - June 30, 2023 0
கடலூர்: கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில்…

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *