பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்- இந்திய சட்ட ஆணையம்

224 0

சென்னை:

திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அதேவேளையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்’ என்றார்.பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்-  இந்திய சட்ட ஆணையம் | Public Religious Organizations Can Comment on uniform  Civil Code

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சு, எதிர்க்கட்சிகள் மத்தியில் மீண்டும் சூட்டை கிளப்பி உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், 22-வது இந்திய சட்ட ஆணையம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை பயன்படுத்தும் வகையிலான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கோரி உள்ளது.

இதுதொடர்பாக இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் 22-வது இந்திய சட்ட ஆணையம் ஒரே மாதிரியான சட்டத்தை பயன்படுத்தும் வகையிலான பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே செயல்பட்ட 21-வது இந்திய சட்ட ஆணையமும் இதுகுறித்து ஆய்வு செய்தது. மேலும், பொதுமக்களிடமும் கருத்து கோரியது.

அதன்படி 21-வது சட்ட ஆணையம், குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூறியது. பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவு மற்றும் இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக மீண்டும் ஆய்வு செய்வது என 22-வது இந்திய சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, 22-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடமும் இருந்து கருத்துகளையும், யோசனைகளையும் பெற தீர்மானித்துள்ளது. எனவே, இந்த சட்டம் தொடர்பாக கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

அதுமட்டுமல்லாமல், ‘உறுப்பினர் செயலர், இந்திய சட்ட ஆணையம், 4-வது தளம், லோக் நாயக் பவன், கான் மார்க்கெட், புதுடெல்லி-110 003’ என்ற முகவரிக்கும் தபால் மூலம் கருத்துகளை அனுப்பிவைக்கலாம். https://lawcommissionofindia.nic.in/ என்ற இணையதளத்துக்கு சென்றால் ‘பொது சிவில் சட்டம்-பொது அறிவிப்பு’ என்ற தலைப்பில் ‘லிங்க்’ இருக்கும். இதனை கிளிக் செய்தால் வியூ எனப்படும் பைல் இருக்கும். இதனை பதிவிறக்கம் செய்யும்போது பொது சிவில் சட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

அதில் ‘கிளிக் கியர்’ என இருப்பதை பயன்படுத்தி தங்களது பெயர், செல்போன் எண், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, சொந்த மாவட்டம், மாநிலம் போன்றவற்றை பதிவு செய்து தங்களது கருத்துகளை எழுத்து வடிவில் பி.டி.எப். பைலாக 2 எம்.பி. அளவுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்யலாம். இல்லாதபட்சத்தில் அங்கேயே தங்களது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம். தேவைப்பட்டால், தனிப்பட்ட விசாரணை அல்லது கலந்துரையாடலுக்கு எந்தவொரு தனிநபரையும் அல்லது அமைப்பையும் ஆணையம் அழைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

Related Post

வாட்டி வதைக்கப்போகும் வெயில்..! மக்களே உஷார்

Posted by - April 11, 2023 0
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

இன்றுடன் விடைபெறும் 2022.. புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Posted by - December 31, 2022 0
New Year 2023: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 2022 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறும் நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்கள் உற்சாகமாக…

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Posted by - November 5, 2025 0
“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்” “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று…

நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

Posted by - December 14, 2023 0
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார். நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *