மின் கட்டணம் குறைய போகுது.. வீட்டுக்கே கணக்கெடுக்க வரும் அதிகாரிகள்.. சந்தோஷமான செய்தி

244 0

சென்னை:

அடுக்குமாடி பொது சேவை மின் கட்டணத்தை குறைப்பு விவகாரத்தில் வீட்டுக்கே வந்து அதிகாரிகள் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். எந்த வீடுகள் எல்லாம் பத்து வீடுகள் அல்லது மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதோ அவற்றுக்கு மட்டுமே பொது சேவை மின் கட்டணத்தை குறைக்கப்படும் என்று அறிவித்து, கணக்கெடுப்பு பணியை மின் வாரியம் துவக்கியுள்ளது.

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தியது. மின் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்த நிலையில், அப்போது பல வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளில், ‘லிப்ட், மோட்டார் பம்ப்’ போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை மீட்டர் பிரிவுக்கு, ‘ஒன் டி’ என்ற தனி மின் கட்டண விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.இதை மட்டும் டிரை பண்ணுங்க.. உங்க வீட்டு மின் கட்டணம் சர்ருன்னு குறைவு!  மின்சாரத்தை சேமிக்கும் டிப்ஸ் | How to reduce electricity bill by saving  electricity? - Tamil ...

அதாவது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த தொகையான 1 யூனிட்டிற்கு, 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கட்டணம், இந்தாண்டு ஜூலை முதல் 1 யூனிட், 8.15 ரூபாயாகவும்; மாதம் நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு, 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முடிவால் வாடகைதாரர் உட்பட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பலரும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்..

இதையடுத்து, ‘பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள, ‘லிப்ட்’ வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொது சேவை கட்டணம் யூனிட்டிற்கு, 8 ரூபாயில் இருந்து, 5.50 ரூபாயாக குறைக்கப்படும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் 18ம் தேதி அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ID-யை மின் கட்டண ஆணை எண் 7-ஐ நாள் கடந்த 2022 செப்டம்பர் மாதம் உருவாக்கியது. தமிழக முதல்வர் கடந்த 18ம் அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் “பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தியும் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50/யூனிட் என நிர்ணயித்தும் உள்ளன.

இந்தக் கட்டணங்கள் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும்” என்று அறிவித்தது. இதன்படி மின் கட்டண குறைப்பு இம்மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து தற்போது, மூன்று மாடி உடைய வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகம் முழுதும், அடுக்குமாடி குடியிருப்புகளில், ‘ஒன் டி’யில் இடம்பெறும் பொது சேவை பிரிவுக்கு, 9 லட்சம் மின் இணைப்புகள் மாற்றப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு மின் இணைப்பையும் அதிகாரிகள் வீடு தேடி ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு அறிவித்துள்ள சலுகையில் இடம்பெறும் வீடுகள் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வீடுகளை நேரில் ஆய்வு செய்த பின்னரே, மின் கட்டணம் குறைக்கும் நடவடிக்கையில், அதாவது கட்டணம் விகிதத்தை மாற்றும் பணியை அதிகாரிகள் செய்வார்களாம். எனவே உங்கள் வீடுகளுக்கு வந்தார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்..

Related Post

sslc tn

TN 10th Result : அறிவியலில் சென்டம் அதிகம்.. வியப்பை ஏற்படுத்திய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Posted by - May 20, 2026 0
Tamil Nadu 10th Result 2026 Centum Scorers: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வுகளை 4,35,247 மாணவியர்களும், 4,35,396 மாணவர்களும் என மொத்தம் 8,70,643 மாணாக்கர்கள் எழுதினர்.…

நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்

Posted by - December 8, 2022 0
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட…

வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகுது கனமழை!

Posted by - November 14, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆங்காங்கே விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த…

பெண் நடன கலைஞருக்கு பாலியல் சித்ரவதை – திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - March 23, 2024 0
கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பெண் நடன…

தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை

Posted by - August 4, 2023 0
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *