தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை

219 0

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 4 பேரும் சந்தேகப்படும்படி இருந்ததால் அவர்களை காரை விட்டு கீழே இறங்க வைத்து விசாரித்தனர்.Suggestions for making the Police Investigation more effective and  efficient with minimal scope of any lapse – Radhey Krishna Legal Aid  Foundation

அதில் அவர்கள் 3 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்பு பாகங்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் பார்சலாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த உடல் உறுப்புகள் மனிதருடையதா அல்லது விலங்குகள் உடையதா என தெரிய வில்லை. இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் உறுப்பு பாகங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிடிபட்ட தேனி நபர் ஏற்கனவே நரபலி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இவர் மீது மாந்தரீக வேலையில் ஈடுபட்டு மோசடி செய்ததாகவும், வழக்குகள் பதிவாகி உள்ளது.

எனவே யாரையேனும் நரபலி கொடுத்து அவர்களது உடல் உறுப்புகளை விற்பனைக்காக கொண்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட சிவகங்கை மாவட்ட கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

அமோனியா வாயு கசிவு விவகாரம்… அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

Posted by - December 27, 2023 0
சென்னை: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

செடியிலேயே அழுகும் அவலம்; நாள்தோறும் எகிறும் தக்காளி விலை – கிலோ ரூ.130 வரை விற்பதால் மக்கள் அவதி!

Posted by - July 3, 2023 0
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிலோ ஒன்றுக்கு 160 வரை விலை அதிகரித்துள்ளது.…

கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

Posted by - November 23, 2022 0
மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

Posted by - January 6, 2025 0
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவானது அரசு அனுமதி இன்றி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக வெற்றிக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *