வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

387 0

நாமக்கல்:

இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் உட்பட லட்சக்கணக்கானோர் உள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 1 லட்சம் லாரிகளுக்கு மேல் அடங்கும். இந்த லாரிகளுக்கு தானியங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், சிமெண்ட் என பலவகையில் லோடுகள் கிடைக்கிறது. சரக்குகள் கையாளுவது மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

சமீப காலமாக டீசல், சுங்க கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் உட்பட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் அங்கு விவசாய பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரி தொழில் பாதித்தால் அதைச் சார்ந்த தொழில் அனைத்தும் பாதிக்கும். மகாராஷ்டிராவில் இருந்து பெரிய வெங்காயம், பூண்டு, கொண்ட கடலையும், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து துவரை, உழுந்து, பச்சை பயிறு, குஜராத்திலிருந்து மசாலா பொருட்களும் தமிழகத்திற்கு லாரிகள் மூலம் வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜராத்தில் புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு சாகுபடி செய்த பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. பல மாவட்டங்களில் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வர வேண்டிய லோடுகளின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சவ்வரிசி, மஞ்சள், கல் மாவு, அரிசி, வெல்லம், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை வட மாநிலங்களுக்கு செல்லவில்லை. இதனால் காரணமாக தமிழக முழுவதும் லோடு கிடைக்காமல் 30 சதவீதத்துக்கும் மேலாக சுமார் 2 லட்சம் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் டிரைவர், கிளீனர், சுமை தூக்குவோர் உள்ளிட்டவர்கள் போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். அதே போல் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Post

தன்னை உருவாக்கிய கேப்டனை கண்டு கதறியழுத விஜய்..

Posted by - December 29, 2023 0
தமிழ் சினிமாவிற்கு இன்று மிகப்பெரும் பேரிழப்பு என்றே சொல்லலாம். கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இன்று இறந்தார். பல பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் இரங்கல்களை…

2026 புத்தாண்டு கொண்டாட்டம் : இதெற்கெல்லாம் அனுமதி இல்லை..சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

Posted by - December 31, 2025 0
அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : புத்தாண்டு (2026) கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை…

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம்

Posted by - February 20, 2023 0
மயில்சாமி மறைவு மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம் நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள்…

துணிவு இருந்தால்… – அஜித் படத்துக்கு ஆதரவாக மாறிய கருணாநிதி ட்வீட்- கொண்டாடும் ரசிகர்கள்

Posted by - January 9, 2023 0
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர் துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள்…

தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை ஆய்வு மையம்

Posted by - April 14, 2023 0
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என்று  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *