வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

169 0

சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான சோதனைகள் கர்நாடகாவின் மைசூர் மற்றும் பாகல்கோட்டை சர்க்கிளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
தற்போது நம் நாட்டில் மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை குறைத்து விட்டனர். பெட்டிக்கடை, டீக்கடை முதல் பெரிய பெரிய மால், கார் ஷோரூம் வரை அனைவரும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது அதிகரித்து விட்டது.

வங்கி கணக்கில் மட்டும் பணம் இருந்தால் போதும். செல்போனை எடுத்து கொண்டு எந்த கடைக்கு வேண்டுமானாலும் சென்று பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை ஒரு நிமிடத்துக்குள் விற்பனையாளரின் வங்கி கணக்கிற்கு மாற்றி விட முடியும்.

ஆனால் நாடு முழுவதும் மக்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் தபால் அலுவலகங்களில் இன்னும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தபால் நிலையங்களுக்கு செல்லும்போது கையில் பணம் வைத்திருக்க வேண்டிய நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி யுபிஐ மூலமாக தபால் அலுவலகங்களில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Related Post

வேகவைத்த உருளைக்கிழங்கை குளிர்சாதன பெட்டியில் வைப்பது இந்த ஆபத்தான நோயை உண்டாக்குமாம்… ஜாக்கிரதை…!

Posted by - November 28, 2023 0
வேகவைத்த உருளைக்கிழங்கு எண்ணற்ற சமையலறைகளில் பல்துறை மற்றும் பிரியமான உணவாக இருக்கிறது, ஆனால் இதனை சேமிப்பது என்று வரும்போது, அதற்கு குளிர்சாதன பெட்டி சரியான இடமாக இருக்காது.…

மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?

Posted by - January 8, 2025 0
பொங்கல் பண்டிகையை முன்னிடு 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை…

உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ பெருமிதத்துடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

Posted by - January 23, 2025 0
தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும்…

கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு கைகொடுக்கும் கொடிபசலை இலைகள்

Posted by - December 11, 2023 0
சென்னை: கொடிபசலை கீரைகளின் நன்மை என்ன தெரியுமா? சரும பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் இந்த கீரையின் சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா? சிகப்பு, பச்சை என்று 2 வகையான கொடி…

கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றது யார்?- 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

Posted by - July 29, 2023 0
கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *