சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

251 0

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வைக்க கூட்டணியை வலுப்படுத்துல், 5 ஆண்டுகள் ஆட்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு:

ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் திமுக அரசிற்கு அடி மேல் அடியை வாங்கித் தந்து கொண்டிருக்கிறது. கடந்த கால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை மிக கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு, தற்போது அவரது ஆட்சியில் நடக்கும் சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்கள் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் என அதன் பட்டியல் நீ்ண்டு கொண்டே போகிறது. திருவண்ணாமலையில் ஒரே நாளில் நடந்த வங்கி ஏடிஎம் கொள்ளை பொதுமக்களின் உடைமைகள் பாதுகாப்பை கேள்வி எழுப்பிய நிலையில், தலைநகர் சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

கொலை, பாலியல் வன்கொடுமைகள்:

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலைமையா? என்று அனைவரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகத்தின் உள்ளே புகுந்து திமுக ஆதரவாளர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது பெண்களின் பாதுகாப்பில் திமுக அரசு கொண்டுள்ள அக்கறை மீது கேள்வியை எழுப்பியது.

லாக்கப் மரணம்: 

இதையடுத்து, திருவள்ளூரில் சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி மட்டுமின்றி காவல்துறை உயர் அதிகாரியான ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக வெளியானது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, சிவகங்கையில் இளைஞர் ஒருவர் காவல்துறை விசாரணைக்காக சென்றபோது உயிரிழந்த சம்பவம்  தமிழ்நாட்டில் தொடரும் லாக்கப் மரணங்களின் அவலத்தை காட்டியுள்ளளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மட்டும் 25 லாக்கப் மரணங்கள் அரங்கேறியுள்ளதாக பா.ஜ.க. நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்கள் பொதுமக்களுக்கு திமுக ஆட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதன் காரணமாக கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்காக பல வியூகங்களை வகுத்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு இந்த சட்டம் ஒழுங்கு சிக்கல் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தேர்தலில் எதிரொலிக்குமா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் பெரும் வேதனையையும், அதிருப்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதால் அது தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரங்களை மக்கள் மத்தியில் பெரியளவில் கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

Related Post

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 28, 2024 0
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - August 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

பருவமழை தீவிரம்… மழை நிலவரங்களை கண்காணித்து வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம்

Posted by - November 30, 2023 0
சென்னை: இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து…

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு

Posted by - April 13, 2024 0
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட…

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

Posted by - February 20, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரியானா, குஜராத்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *