வானில் பறந்த மர்ம பொருள்…பறக்கும் தட்டில் ஏலியன்களா..? வைரலாகும் வீடியோ!

258 0

ஹைதராபாத் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வானில் மர்ம பறக்கும் பொருள் கடந்து சென்றதை வீடியோ எடுத்த பொதுமக்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஹைதராபாத் அருகே வானில் பறந்த மர்ம பொருளைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறக்கும் தட்டில் ஏலியன்கள் வந்துள்ளன என நினைத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விகராபாத் மாவட்டத்தில் மார்பள்ளி கிராமத்தில் மர்ம பொருள் ஒன்று வானில் பறந்துள்ளது. தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் அந்தப் பொருள் விழுந்துள்ளது. இதை வீடியோவாக எடுத்த பொதுமக்கள் அதை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

பறக்கும் தட்டில் ஏலியன்கள் வந்துள்ளதாக வதந்தி பரவவும் , அந்த மர்ம பொருளை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மார்பள்ளி கிராமத்தில் திரண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு மர்ம பொருளை பொதுமக்கள் நெருங்கிவிடாமல் தடுக்கப்பட்டது. ஆந்திரா மாநிலத்தில் மர்ம பொருள் பறக்கும் வீடியோவும், அந்த பொருள் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று முதல்கட்ட தகவல்களை சேகரித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அந்த மர்ம பொருள் ஒரு ஹீலியம் பலூன் எனத் தெரியவந்தது.இதையடுத்து பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஹீலியம் பலூன் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஹீலியம் பலூனில் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பொருட்கள் இருந்ததாகவும். அவற்றைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில், அந்த பலூன் புவியின் மேற்பரப்பு ஆராய்சிக்காக அனுப்பப்பட்டது என்பதும் தெரியவந்தது.

Related Post

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்..

Posted by - August 15, 2025 0
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

Posted by - August 10, 2024 0
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில்…

அலார்ட் மக்களே.. ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது.. ரிசர்வ் வங்கி அதிரடி!

Posted by - July 30, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி ஆகஸ்ட் மாதம் வங்கிகள் 14 நாட்கள் இயங்காது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அந்த நாட்கள் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும் இயங்காது…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Posted by - December 11, 2025 0
நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *