விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னை – மன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?

216 0

அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை, தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக கூறிய திமுக எம்.பி.

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.

“கோ மூத்ரா” மாநிலங்களில் பாஜக வெற்றி

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய, தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசினார். அப்போது, பொதுவாக “கோ மூத்ரா” மாநிலங்கள் என்று அழைக்கப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும் என்று கூறினார். ஆனால், தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானாவில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று பேசினார்.

வெடித்த சர்ச்சை – மன்னிப்பு கோரி எம்.பி.

திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துடன் பகிரப்பட்டது. இந்நிலையில், தனது கருத்துக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய போது, தவறான பொருள் அளிக்கும் வகையில், ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை என்று திமுக எம்.பி. செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அது தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“திமுக எம்.பி.யை கண்டித்து மு.க.ஸ்டாலின்”

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொதுவெளியில் கருத்துகளை கூறும் போது, நாகரிகத்தையும், பண்பாட்டையும் காக்கும் வகையில் நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், செந்தில்குமாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

Posted by - February 23, 2023 0
ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு…

தந்தையைப் பழிவாங்க மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 15 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 2, 2022 0
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே…

பாசிட்டிவ் மோடில் பங்குச் சந்தை..

Posted by - August 16, 2024 0
இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தலா 1% மேல் உயர்வுடன் இருப்பதால் முதலீட்டாளர்கள் காலையிலேயே உற்சாக மனநிலையில் இருக்கின்றனர்.…

ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி

Posted by - June 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு…

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *