2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில் பறந்த அந்த ஆர்டர்

233 0

சென்னை:

கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டை சூழ்ந்த வெள்ளத்தால் வாங்கி வைத்த பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன. அது போல் சிறு சிறு பெட்டிக் கடைகளில் கூட மளிகை பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன.

வீட்டில் மின் சாதன பொருட்கள் நீரில் மூழ்கி, காயலான் கடைக்குகூட போட முடியாத சூழல் எழுந்துள்ளது. தற்போது இந்த அளவுக்கு மழை பெய்யும் என மக்கள் யாரும் நினைக்கவில்லை, அதுதான் இத்தனை பாதிப்புக்கு காரணம்.2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில்  பறந்த அந்த ஆர்டர் | Chennai Weather explains about what happened in  Chembarambakkam lake ...

இந்த மழையை 2015 பெருவெள்ளத்துடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். தற்போது வந்த புயலே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வடகிழக்கு பருவமழையே இன்னும் முடியாமல் இருக்கும் போது இனி அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் தற்போது கீழ் தளத்தில் குடியிருக்கக் கூட ஆட்கள் வராமல் வீட்டு உரிமையாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மற்ற தளங்களுக்கு எல்லாம் போட்டா போட்டி நிலவுகிறது. அது போல் வீட்டை வாங்கும் போதும் கூட மேல் தளங்களையே மக்கள் விரும்புகிறார்களே தவிர கீழ் தளத்தை அல்ல. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம் குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் உள்ளன.

இதுகுறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் அதீத மழை பெய்தது. ஏற்கெனவே அந்த ஏரியில் நவம்பப் 30ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து மழை பெய்து வந்தது. அப்படி பார்த்தால் 36 முதல் 48 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என 2015 டிசம்பர் 1 ஆம் வெளியான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு மிகவும் தாமதம். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் 2.12.2015 ஆம் தேதி அதிகாலை தண்ணீரின் அளவு அபாய அளவை தாண்டியது. ஏற்கெனவே அந்த ஏரியில் 2016ஆம் ஆண்டு கோடை காலத்தையொட்டி 85 சதவீதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பெரு மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திறந்துவிடும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டார்கள். இதனால் ஏரியில் நீர் பாயும் திசையில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சூழல் குறித்து பலருக்கு தெரியாது. இதனால் ஏரி திறப்பு விவகாரத்தை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. மேக வெடிப்பு போன்ற மழையால் தண்ணீரின் அளவுக்கு அபாய கட்டத்தை எட்டிவிட்டால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் 76 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு இருந்தது. ஆனால் நகரில் பெய்த பெரு மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு 2015 ஐ விட தற்போதுதான் மக்களுக்கு அதிகரித்துள்ளது என சென்னை வெதர் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

“மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை” – பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியது என்ன? – MaKa Stalin

Posted by - March 25, 2024 0
 PMK Candidate: சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவு காணுகிறார்கள் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குற்றம்…

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சிறுமியின் பெற்றோருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்..!!

Posted by - March 7, 2024 0
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி…

கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

Posted by - November 23, 2022 0
மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *