“மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை” – பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியது என்ன? – MaKa Stalin

231 0

 PMK Candidate: சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவு காணுகிறார்கள் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் கடலூர் தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணி, மயிலாடுதுறை தொகுதியில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், சேலத்தில் அண்ணாதுரை உள்ளிட்ட 10 நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நபர்கள், பாமக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ம.க.ஸ்டாலின், ஆதரவு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று கும்பகோணத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேரில் வந்து, அங்குள்ள பாஜக நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது, “எனது தந்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், என்னுடைய வாழ்க்கையே போராட்டம் என்ற ரீதியில் தொடங்கியது.

பிரதமர் மோடி 3வது முறையாக மீண்டும் அரியணை ஏறச் செய்ய வேண்டும். சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் எனக கனவு காணுகிறார்கள். இந்த மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை, மாறாக இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் பிரதமர் மோடிதான் போட்டியிடுகிறார் என எண்ணி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்தார்.

Related Post

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை

Posted by - August 4, 2023 0
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு…

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

ஒரே சாய்ஸ் அதிமுக கூட்டணி தான்…தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.?

Posted by - April 26, 2025 0
அதிமுகவிடம் ஓவராக டிமாண்ட் செய்து, கூட்டணியை கோட்டைவிட்டு விட்டதாக தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் யார் என்று தெரியுமா.? உங்க பேச்சை எல்லாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *