6 வயதில் முதல் இணையதளம்…11 வயதில் சொந்த நிறுவனம்…உலகின் இளைய பெண் CEO !

235 0

World Youngest CEO – இந்தியாவின் – கேரளா மாநிலத்தில் கோழிகோடு நகரைச் சார்ந்தவர் தான் ஸ்ரீ லெட்சுமி சுரேஷ், 1998 யில் பிறந்தவர், தனக்கு 3 வயது இருக்கும் போதே கம்ப்யூட்டரில் புகுந்து விளையாட ஆரம்பித்தார், இவரது திறமைகள் பலரையும் வியக்க வைத்தன,  நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டர் மற்றும் வெப் டிசைனில் தீராத ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறார்.

அவருக்கு அப்போது (2004) 6 வயது இருக்கும், பள்ளியில் ஒரு பிராஜக்டுகளை செய்து வர சொல்லி இருக்கிறார்கள், ஸ்ரீ லெட்சுமியின் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் போல வீடு செய்து கொடுக்கலாம், இல்லையேல் கடைகளில் வாங்கி எதையாவது கொடுக்கலாம் என முடிவு செய்து இருக்கின்றனர், ஆனால் ஸ்ரீ லெட்சுமிக்கோ வேறு ஒரு ஐடியா இருந்து இருக்கிறது.

அது தான் இணையதளம்,  அவருடைய 6 வயதிலேயே ஒரு இணையதளத்தை ப்ராஜக்டாக செய்ய வேண்டும் என்று அவருடைய மூளை அவருக்கு கூறி இருக்கிறது,  ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் அவருடைய குடும்ப படங்களை எல்லாம் பகிர்ந்து இருக்கிறார், அது பள்ளியில் மட்டும் வைரல் ஆகாமல் பிரபல தொலைக்காட்சி செய்திகளிலும் வைரலானது.

அதற்கு பின்னர் 11 வயதில் eDesign என்ற பெயரில் ஒரு வெப்சைட் டிசைன் கம்பெனியையும் துவங்கினார், உலகின் முதல் இளைய பெண் CEO வாக இந்தியாவே அவரை அப்போது போற்றியது, அக்காலக்கட்டத்தில் இவர் ஆட்கொண்ட கிளையண்டுகள் எல்லாமே மைக்ரோசாப்ட், நோகியா, கோக் போன்ற மல்டி நேஷனல் கம்பெனிகள் தான், தோனி மாறி அடிச்சா சிக்ஸர் தான் என்ற பாணியை கொண்டவர் ஸ்ரீ லெட்சுமி.

” தற்போதும் கேரளாவின் அரசு சார்ந்த பல அலுவல் இணையதளங்கள் இவரது நிறுவனத்தின் மூலம் தான் இயங்கி வருகின்றன, தொடர்ந்து இன்னும் பல மல்டி நேஷனல் பிராஜக்டுகளை கையில் எடுக்கவும் முயற்சித்து வருகிறார் ”

Related Post

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்

Posted by - May 12, 2025 0
ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல்முறை அல்ல. வாஜ்பாய் காலத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே கார்கில் போரை தன்னிச்சையாக…

பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

Posted by - December 13, 2025 0
அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது”…

இந்தியாவில் 6 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது

Posted by - February 21, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக…

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Posted by - April 26, 2023 0
சிம்லா : கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த…

ரூ.10-க்கு ரீசார்ஜ் திட்டம்: டிராய் உத்தரவு!

Posted by - January 17, 2025 0
365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய பத்து ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இன்றளவும் 15 கோடி பேர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *