நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

130 0

அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன.

SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SIR-ஐப் புறக்கணிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள்

போலி, மோசடி வாக்காளர்களைக் கண்டறிந்து களையெடுக்கும் நோக்கில், SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. எனினும் இது எதிர்க் கட்சிகளின் வாக்குகளைத் திட்டமிட்டு பறிக்கும் முயற்சி என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், SIR பணிகளில் ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களாக ஈடுபட்டு வருகின்றனர். SIR படிவங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து, அவற்றை நிரப்பி பெறும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு

வழக்கமான அலுவல்களுக்கு மத்தியில் இந்தப் பணிகளை மேற்கொள்வது கடினமாக இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

உரிய திட்டமிடல், பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணிகளைச் சுமத்தி இருப்பதாலும், நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் SIR பணிகளைச் செய்ய நிர்ப்பந்திப்பதாலும் தங்ககளுக்கு கடுமையான பணிச் சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளனர்.

Related Post

2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

Posted by - December 30, 2025 0
 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும்…

”இந்த ஆண்டுதான் கோடையா?விமர்சித்த விஜய்

Posted by - February 13, 2026 0
’இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலமா? விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகை கிடைத்தது என மகளிர் நினைக்க வேண்டும்’’ என தவெக…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…

திமுகவுக்கு கவுன்ட் டவுன்..

Posted by - January 23, 2026 0
 தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார். தமிழ் நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *