தமிழகத்தில் வருகிற மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மதுபான கடைகள் மற்றும் பார்களை திறந்தால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
தமிழகத்தில் மதுபானம் விற்பனை மூலம் தினந்தோறும் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்து வருகிறது. அதிலும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்றால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 200 முதல் 300 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெறும். அந்த வகையில் அரசு சார்பாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப மதுபானம் குடிப்பது சர்வசாதாரணமாகி வருகிறது. மது குடிப்பதை நவீன கால இளைஞர்கள் பேஷனாக்கி வருகிறார்கள். இரவு விருந்து நிகழ்வில் கூட ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கைகளிலும் மதுபான கோப்பைகள் காணும் நிலை அதிகரித்து வருகிறதுதமிழகத்தை பொறுத்தவரை சுமார் 4ஆயிரம் மதுபான கடைகள் உள்ளது. முக்கிய விஷேச நாட்களில் மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் முழுமையாக திறந்து இருக்கும்.அதே நேரம் தமிழகத்தில் குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருவள்ளூவர் தினம், மிலாது நபி, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினம், மஹாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களில் விடுமுறையானது விடப்படும்தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 4ஆயிரம் மதுபான கடைகள் உள்ளது. முக்கிய விஷேச நாட்களில் மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் முழுமையாக திறந்து இருக்கும்.அதே நேரம் தமிழகத்தில் குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருவள்ளூவர் தினம், மிலாது நபி, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினம், மஹாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களில் விடுமுறையானது விடப்படும்அந்த வகையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வருகிற செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் எனவும், மீறி கடைகளை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.