இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியாக உயரும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

182 0

சென்னை:

இன்று உலக சர்க்கரை வியாதி தினம். சர்க்கரை வியாதியை பொறுத்தவரை நாள்பட்ட நோய். இது வந்தாலே வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரையோடுதான் வாழ வேண்டிய சூழ்நிலை. இந்த வியாதி வந்தால் கண் பார்வையிழப்பு, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த வியாதி வந்தால் கண் பார்வையிழப்பு, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 10 கோடி பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு | India's  diabetes rate up 123% since 1990 - Tamil Oneindiaஇந்த எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யாவிட்டால் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறி உள்ளார்கள்.

இந்திய உணவுகளை பொறுத்தவரை சர்க்கரை, கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளே புழக்கத்தில் உள்ளது. எனவே உணவு விசயத்தில் கவனமும், உணவு கட்டுப்பாடும் அவசியம். உலக அளவில் உறுதி செய்யப்படும் 7 சர்க்கரை வியாதிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்கள்.

19 வயதுக்குட்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கு டைப்-1 வகை சர்க்கரை வியாதி இருக்கிறது. டைப்-1ஐ பொறுத்தவரை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள், கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்துகிறது. இவர்களுக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.

டைப்-2 வகையை பொறுத்தவரை தடுக்க முடியும். அதற்கு சீரான உணவை சாப்பிடுவது, தினமும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆபத்தை வெகுவாக குறைக்கும் என்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் கோவாவில் 26.4 சதவீதமும், புதுவையில் 26.7 சதவீதமும் உள்ளது. தமிழகத்தில் 14.4 சதவீதத்தினரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வாழ்க்கை முறை, உணவு முறையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் சர்க்கரை வியாதி வருவதை கட்டுப்படுத்தும்.

Related Post

விசிக எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றம் @ கும்பகோணம் மகாமக குளக்கரை – நடந்தது என்ன?

Posted by - December 26, 2023 0
#kumbakonam #tnbjp #vck #annamalai #enmanenmakkal #dmk #pixeltv#pixelmedia கட்சி கொடிகள் அகற்றப்பட்ட மகாமக குளக்கரைப் பகுதி கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள்…

ரூ.1 கோடி நஷ்டஈடு தரணும்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை!

Posted by - December 9, 2023 0
15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு…

புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Posted by - December 28, 2022 0
விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு.. ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அந்த கட்சி தலைமை…

கண்பார்வையை அதிகரிக்க கேரட் மட்டுமில்லை இந்த எளிய பொருட்களையும் சாப்பிடலாமாம்… ட்ரை பண்ணுங்க…!

Posted by - October 17, 2023 0
நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று கண்கள். நம் கண்களால் தான் நாம் இந்த உலகை ரசிக்க முடிகிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறையால் கண்…

யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

Posted by - January 6, 2025 0
பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *