நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது கட்சியை தேசிய கட்சியான பாஜகவுடன் இணைத்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை செய்தியாளர்களிடம் தெரிவித்த சரத்குமார் கூறியதாவது:
மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன்.
இது நம் நாட்டின் எழுச்சியின் தொடக்கம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக மக்களுக்கு மகத்தான சேவையை வழங்க காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.இதையடுத்து செயஹியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது :
நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்து வைக்க பாஜக விரும்பவில்லை அவர் நிச்சயம் அரசியல் களத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்துவார் என தெரிவித்தார்.