aidmk

டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.?

54 0

அதிமுகவின் மூத்த நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு தற்போது டம்மியான பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி.வேலுமணி டீம் இன்று காலை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.அதிமுகவின் மூத்த நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு தற்போது டம்மியான பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி.வேலுமணி டீம் இன்று காலை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

அதிமுகவின் தொடர் தோல்வி

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக, 2017ஆம் ஆண்டு அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி தலைமையை பிடிக்கும் போட்டியில் பல பிளவுகளாக அதிமுக பிளவுப்பட்டது. இதனையடுத்து கடந்த 9 வருடங்களாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார் எடப்பாடி பழனிசாமி, ஆனால் இந்த தேர்தலில் 3வது இடத்திற்கே அதிமுக தள்ளப்பட்டது.

மூத்த நிர்வாகிகள் கட்சி பதவி பறிப்பு

இதனையடுத்து கட்சி தலைமையின் மீதான அதிருப்தியால் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டனர். மேலும் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக மூத்த தலைவர்களான தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன்,காமராஜ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களின் பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டார் , மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார். இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. அதே நேரம் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் பேச்சு நடைபெற்ற நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்தனர்.

ஆனால் இரு தரப்பும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளாமலும், எதிரும் புதிருமாக இருந்தனர். அந்த வகையில்  பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நேற்றைய தினம் புதிய பொறுப்புகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி, இதன் படி, துணை பொதுசெயலாளர் ஆக்கப்பட்டுள்ளார் வேலுமணி, அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் செ.மா. வேலுசாமிக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதே நேரம் வேலுமணிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தலைமை நிலைய செயலாளர் என்ற பொறுப்பு வகித்து வந்த அவருக்கு துணை பொதுசெயலாளர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

டம்மியாக்கப்பட்ட நிர்வாகிகள்

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய தங்கமணி, KP அன்பழகன், காமராஜ், கேசி வீரமணி , கிருஷ்ணமுரளி, திருத்தணி அரி உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக டம்மியாக அமைப்பு செயலாளர் பதவியானது வழங்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், அருண்மொழி தேவன், NSN நடராஜ் உள்ளிட்டோருக்கு கொள்கை பரப்பு இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் CV சண்முகத்துக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய எம் எல் ஏக்கள் அனைவரும் டம்மி ஆக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அமைப்பு செயலாளர், கொள்கை பரப்பு இணை செயலாளர் போன்ற பொறுப்பு தான் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன.? எஸ்.பி.வேலுமணி இன்று முக்கிய முடிவு

இதனால் அதிருப்தி அடைந்துள்ளது எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, இன்று காலை 11 மணிக்கு முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்தாக என்ன செய்வது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நீக்க பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுப்பதா? அல்லது தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவதா என ஆலோசிக்கவுள்ளனர். எனவே இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி அணி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

Gemini Generated Image slc13kslc13kslc1

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026 0
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…
Generated Image January 23 2026 11 16AM

வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

Posted by - March 23, 2026 0
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு…

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…
OPS

ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா?

Posted by - February 28, 2026 0
அதிமுக-வால் ஓரங்கட்டப்பட்டு திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் ஆட்சி அமைந்தால் சபாநாயகர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசி என்று மக்களால் அறியப்பட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *