குரு-சிஷ்யன்
தமிழ் சினிமாவில் 80, 90களில் தரமான படங்கள் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பாரதிராஜா.
என் இனிய தமிழ் மக்களே என தனது கம்பீரமான குரலில் மக்களை கவர்ந்தவர் இப்போது நம்முடன் இல்லை. உடல்நலக் குறைவால் வீடு-மருத்துவமனை என இருந்தவர் கடந்த ஜுன் 10ம் தேதி உயிரிழந்தார்.
அவரின் இறப்பையே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதற்குள் அவரது சிஷ்யனான கே.பாக்யராஜ் அவர்களும் உயிரிழந்துள்ளார்.
நடிகை குஷ்புவின் மகள் திருமணத்திற்கு எல்லாம் சென்று நன்றாக இருந்த கே.பாக்யராஜ் அவர்கள் தனது மனைவியுடன் வாக்கிங் சென்ற நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
நன்றாக இருந்தவருக்கு இப்படி ஆகிவிட்டதே என எல்லோருமே புலம்புகிறார்கள்.
ஸ்பெஷல்
ஒரே மாதத்தில் குரு-சிஷ்யனாக இருந்த பாரதிராஜா-கே.பாக்யராஜ் இருவரும் உயிரிழந்தது ஒரு ஷாக்கிங் விஷயமாக உள்ளது.
பல பிரபலங்கள் இருவரை பற்றியும் நிறைய விஷயங்கள் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜீ தமிழின் மகா நடிகை ஷோவில் குரு சிஷ்யன் டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.