%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 %E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 2

CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு – சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?

62 0

CM Vijay TN Govt: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை, பட்ஜெட் என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

CM Vijay TN Govt: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, வரும் ஜுலை மாதத்தில் தனது முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்ட உள்ளதாம்.

வேகமெடுக்கும் தமிழ்நாடு அரசு:

சட்டமன்ற தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதற்கட்டமாக நிர்வாக ரீதியாக பல்வேறு ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளது. அதற்கான முதல் முயற்சியாக சட்டப்பேரவை கூட்டப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசின் நிதிநிலை எப்படி உள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் வெள்ளை அறிக்கையையும் முழு வேகத்தில் தயார்படுத்தப்பட்டு வருகிறதாம்.

 

இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை..

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளன்றே, மாநிலத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என விஜய் அறிவித்தார். இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்கள் எவ்வளவு கடன்சுமையை உயர்த்திவிட்டு சென்றனர், எதற்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்ற விவரங்களை மக்கள் அறிய வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக நேற்று சென்னையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “வெள்ளை அறிக்கை வேகமாக தயாராகி வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என அறிவித்தார். அதாவது நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே வெள்ளை அறிக்கை வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடர் எப்போது?

மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபின் நடைபெற உள்ள முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இதில் ஆளுநர் முதலில் உரை நிகழ்த்த உள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். இந்த ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே நிலவுகிறது.

தயாராகும் பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்புகள்..

ஆளுநர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் அதாவது முதலமைச்சர் விஜய் தலைமையிலான முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மகளிருக்கான ரூ.2,500, தாய்மாமன் சீர், தாலிக்கு தங்கம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் என தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அதன் முடிவில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பதில் உரை வழங்குவார். தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 துறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பதோடு,  துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.

Related Post

மத்திய அரசின் தயவில் ஆட்சி நடத்தும் திமுக அரசு… ஊழலில் திளைக்கும் தமிழக அமைச்சர்கள் ; அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு..!!

Posted by - December 19, 2023 0
விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம் மத்திய அரசின் திட்டத்தில் தான் தமிழக அரசு நடக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் 122…

#BreakingNews‌ | காவலர் – நடத்துநர் சமாதானம்

Posted by - May 25, 2024 0
நாங்குநேரியில் காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் சமாதானம்! #Tirunelveli #Nanguneri #Police #Conductor #TNpolice | #Transportdepartment | #Trafficpolice…

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000… ரேசன் அட்டை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு

Posted by - March 1, 2024 0
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண…

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக ஏமாற்றி இளைஞர்கள்-இளம்பெண்களிடம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல்

Posted by - November 23, 2023 0
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி…

”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

Posted by - May 29, 2025 0
பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *