cmvijayofficers

CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” – அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு

60 0

CM Vijay Drugs Case: போதை பொருட்களை ஒழிக்கும் விவகாரத்தில் தவெகவினர் சிக்கினால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்க, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.

CM Vijay Drugs Case: போதை பொருட்களை ஒழிக்கும் விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாத் எனவும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளாராம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகு தான் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதன் விளைவையே, தமிழ்நாடு தற்போது சந்தித்து வருகிறது என தவெக

”அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படலாம்”

நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர், “சட்டம் ஒழுங்கு  பிரச்னையை பொறுத்தவரை அதிகாரிகள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சமூகத்தி எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுத்து விரைந்து தண்டனையை பெற்றுத்தர வேண்டும். அதேநேரம், இதனால் குற்றவாளிகள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

அரசு பேசி வருகிறது. அதேநேரம், பல்வேறு நடவடிக்கைகள முடுக்கிவிட்டுள்ளதாகவும், விரைவில் போதைப்பொருள் பரவை கட்டுப்படுத்தி, சட்ட-ஒழுங்கை நாட்டிற்கே முன்னுதாரணமாக மாற்றுவோம் எனவும் சூளுரைத்து வருகிறார்கள். இந்நிலையில் தான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.

பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்:

மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் சட்ட-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். முக்கிய வழக்குகளில் சட்ட-வல்லுநர்களை கலந்தாலோசித்து குற்றவாளிகள் தப்பிவிடாத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பை 100 சதவிகிதம் உறுதி செய்வதில் எந்த சமரசமும் கூடாது. இதற்காக உரிய சிறப்பு ஏற்பாடுகளை செய்வதோடு, மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் துல்லியமாக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அங்கு சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

”கட்சி பாகுபாடு கூடாது”

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை வாங்கி தருவதை உறுதி செய்ய வேண்டும். சாதி வேறுபாடுகளை தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகிற போது தான், கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதை கண்காணிப்பதும் அதிகாரிகளின் கைகளில் தான் உள்ளது. வெளிப்படைத்தன்மையே அரசின் முதன்மை நோக்கம். எனவே, மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம். தனி நபர்களின் தலையீடு இருக்காது. ஆளுங்கட்சி என்பது போன்ற எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. தவறு செய்வது யாராக இருந்தாலும் நேர்மையான நடவடிக்கையை முன்னெடுங்கள். கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என aதிகாரிகளுக்கு இடையே முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

Posted by - June 3, 2025 0
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கன்னட திரைப்பட சங்கத்திற்கு கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தக்…

அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – சாடிய உயர்நீதிமன்றம்

Posted by - April 18, 2025 0
பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர்…

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

முதலுதவி.. பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க.. முக்கோண தலையை தெரியுமா.. கவனம் மக்களே

Posted by - October 30, 2023 0
ஈரோடு: பாம்புகள் கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை அற்புதமாக விளக்கியுள்ளார் வனச்சரகர் சதீஷ் நிர்மல். இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர்…

பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?

Posted by - May 22, 2025 0
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *