தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

146 0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து மருத்துவர் ஆவார். இவர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவர் இணைந்தபோது அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உடனிருந்தனர்.

தி.மு.க.வில் இணைந்தது ஏன்?

தி.மு.க.வில் இணைந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த திவ்யா கூறியிருப்பதாவது, “நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பேன். தி.மு.க. ஆரோக்கியத்திற்கு மரியாதை தரும் கட்சி. அதற்கு ஒரு உதாரணம் காலை உணவுத் திட்டம். தி.மு.க. பெண்களுக்கு மிகவும் மரியாதை தரும் கட்சி. அதற்கு ஒரு உதாரணம் புதுமைப் பெண் திட்டம். அனைத்து மதத்திற்கும் மரியாதை தரும் கட்சி தி.மு.க.

கனிமொழி, தமிழச்சி, மேயர் பிரியா, மம்தா பானர்ஜி, ஜோதிமணி ஆகியோரை ரொம்ப பிடிக்கும். நான் இணைந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. என் பணிகளை அவர் பார்த்துள்ளார். எனக்கு மு.க.ஸ்டாலின்தான் ரோல் மாடல். அவரின் உழைப்புதான் காரணம். குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

விஜய்க்கு வாழ்த்து:

விஜய் அண்ணா மட்டுமின்றி மக்கள் பணி செய்யும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வர வேண்டும். இதுவரை விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்கவில்லை. அவருக்கு வாழ்த்துகள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. ஆட்சிதான்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவர் திவ்யா கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார். அரசியல் மீது ஆர்வம் கொண்ட அவர் ஏதேனும் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.  அவரது தந்தையும், நடிகருமான சத்யராஜ் தீவிர பெரியார் ஆதரவாளர். திராவிட கட்சித் தலைவர்களுடன் அவர் நெருக்கமான உறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திவ்யா சத்யராஜ் தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இணைந்துள்ள அவருக்கு விரைவில் கட்சியில் ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

Posted by - July 10, 2023 0
சென்னை: தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

Posted by - February 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை…

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - May 28, 2023 0
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து…

மார்கழி மாதம் கோயில்களில் தினம் தினம் பாடல்கள்: ஏன் இது முக்கியம்?

Posted by - December 20, 2025 0
மார்கழி மாதம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புனிதமான காலம். இந்த மாதத்தில் கோயில்களில் தினமும் பக்தி பாடல்கள் ஒலிக்கின்றன. இதன் பின்னணி, நோக்கம் மற்றும் மக்களுக்கு ஏற்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *