tvkvijay

முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?

62 0

முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் 6 மணி வரை இருந்து பணியாற்றுவதால் பல்வேறு கோப்புகளில் உடனுக்குடன் கையெழுத்து இடுகிறார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே ஒரு அரசுப்பணியாளர் போல காலை 9 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வரும் விஜய் மாலை 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் விஜய்:

இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர்கள் யாரும் ஒரு அரசு அதிகாரி போல தலைமைச் செயலகத்தில் பணியாற்றது இல்லை. ஆனால், விஜய் தலைமைச் செயலகத்தில் மாலை வரை இருப்பதால் அரசு அதிகாரிகளும் தங்களது பணி நேரம் முடியும் வரை அலுவலகத்திலே இருந்து பணியாற்றி வருகின்றனர்.

கோப்புகளில் விரைந்து கையெழுத்து:

பொதுவாக, இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்குவதற்காக அவர்களது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால் மீண்டும் அதிகாரிகளிடம் திரும்பி வருவதற்கு மிகவும் தாமதம் ஆவது வழக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் பாதி நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நேரமே தலைமைச் செயலகத்தில் இருப்பதால் கோப்புகளில் கையெழுத்து இடுவது தாமதமாகி வந்தது.

ஆனால், விஜய் தனது முழு பணி நேரத்தையும் தலைமைச் செயலகத்திலே செலவிட்டு வருகிறார். இதனால், அவரது மேசைக்கு அனுப்பும் கோப்புகளை ஆய்வு செய்து உடனடியாக கையெழுத்திட்டு வருகிறார். இதற்கு முன்பு இருந்த கோப்புகள் முதலமைச்சரின் கையெழுத்தைப் பெற்று அதிகாரிகளிடம் மீண்டும் திரும்பி வந்து பணிகளைத் தொடங்குவதில் மிகவும் தாமதம் இருந்து வந்தது. தற்போது விஜய்யின் நடவடிக்கையால் இந்த தாமதம் குறைந்துள்ளது.

செயலாளர்கள், அதிகாரிகள் ஆச்சரியம்:

விஜய்யின் செயல்பாடுகளை கண்டு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஒவ்வொரு துறையின் செயலாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும், முதலமைச்சரே விரைந்து கோப்புகளில் ஆய்வு செய்து கையெழுத்து இடுவதால் அந்தந்த துறை அமைச்சர்களும் கோப்புகளில் உடனடியாக கையெழுத்து இடுகின்றனர். மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் பல உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் பலரும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

பொதுவாக, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் பணி நேரத்தில் அங்கே இருக்கும் தேநீர் கடைகளிலே பல நேரம் பொழுதை போக்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்த நிலையும் மாறி வருவதாக கூறப்படுகிறது.

முதலமைச்சரே தலைமைச் செயலகத்தில் மாலை வரை இருப்பதால் அவர்களும் தங்களது அலுவலக நேரங்களில் அலுவலக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அலுவலக பணிகளும் வேகமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Related Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார்: இன்று மத்திய குழு ஆய்வு செய்கிறது

Posted by - December 20, 2023 0
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின்…

மனைவியோடு பிரச்சனையை பேசிய தினேஷ்.. உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டும்.. ரச்சிதா எமோஷனல்

Posted by - November 22, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பிரிந்த கதை…

தமிழ்நாடு முழுவதும் பால், தயிர் விலை உயர்வு.. இன்று முதல் அமல்

Posted by - January 20, 2023 0
ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. தமிழகத்தில் தனியார் பாலின்…

சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

Posted by - April 11, 2023 0
சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - December 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *