PhonePe, அமேசான் பே இருக்கா.. அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை!

237 0

இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) செயலிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை இந்த யுபிஐ (upi) செயலிகளை பயன்படுத்த முடிகிறது. குறிப்பாக இந்த செயலிகள் மூலம் சில வினாடிகளில் பணம் அனுப்ப முடிகிறது. ஆனாலும் யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.அதாவது இப்போது யுபிஐ செயலியைப் பயன்படுத்தி அதிகளவில் பணம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். இது குறித்து விரிவான தகவல்களை பார்க்கலாம். சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், போன் பே, ஜி பே (கூகுள் பே) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனை அதிகளவில் நிகழ்வதாகச் சமீபத்தில் அதிக புகார்கள் பதிவாகி உள்ளன.குறிப்பாக போன்பே வழியாக, பொதுமக்களுக்கே தெரியாமல், அவர்களது வங்கி கணக்கில் இருந்து அதிகளவிலான பணம் மோசடியாக எடுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பெறப்பட்ட அனைத்து புகார்களிலும் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும் அமேசான் பே-க்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில் பிஎம் கிசான் யோஜனா என்ற மோசடி செயலியும் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த மோசடி செயலி ஆனது வாட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இது பயனாளிகளின் எஸ்எம்எஸ் பயன்பாட்டையும், செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் இயக்கங்களையும் கட்டுப்படுத்தி அதில் இருக்கும் தரவுகளைச் சேகரித்து, யுபிஐ செயலிகள் மூலம் மோசடி பரிவத்தனைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த நவம்பர் மாதம் மட்டும் தமிழகத்தில் இதுபோன்ற 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவேளை இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் உங்கள் போனுக்கு வரும் மெசேஜ் மூலம் வரும் தெரியாத இணைப்புகளை (லிங்க்) கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தேவையில்லாத செய்திகள் அல்லது மெயில்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக யுபிஐ (UPI) தரவுகளை அல்லது OTP-யை பகிர்வதைத் தவிர்க்கவும்.அதேபோல் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் அதிகாரப்பூர்வ ஆப்களை மட்டுமே டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்துத் தெரிந்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும்.

குறிப்பாக யுபிஐ செயலிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் மோசடி செய்பவர்கள், மெசேஜ், போன் கால் அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மெசேஜ் மூலம் அப்பாவி மக்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் நம்பும் விதமாக எதாவது ஒரு கதையை சொல்லி, அவர்களுடைய வங்கி கணக்கில் (bank account) இருக்கும் பணத்தை எளிதாக திருடிவிடுகிறார்கள். இது போன்ற சம்பவம் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.

Related Post

பாசிட்டிவ் மோடில் பங்குச் சந்தை..

Posted by - August 16, 2024 0
இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தலா 1% மேல் உயர்வுடன் இருப்பதால் முதலீட்டாளர்கள் காலையிலேயே உற்சாக மனநிலையில் இருக்கின்றனர்.…

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

Posted by - August 7, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில்…

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…

இனி கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!

Posted by - May 11, 2024 0
பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கேரள அரசு தடை…

மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

Posted by - June 30, 2023 0
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *