பிரபல இயக்குனர் ராஜமெளலியால் ஆர்ஜே பாலாஜி அதிருப்தி அடைந்த சம்பவம் ஒரு முறை அரங்கேறியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஆர்ஜே பாலாஜி. இவர் நடிகராக மட்டுமின்றி தொகுப்பாளர், இயக்குனர், வர்ணனையாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இவரது இயக்கத்தில் விரைவில் கருப்பு திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர்ஜே பாலாஜியை இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் ராஜமெளலி அதிருப்தி செய்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, ஆர்ஜே பாலாஜி ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பாகுபலி படத்திற்கு அழைப்பு:
பாகுபலி முதல் பாகம் வரும்போது மதன் கார்க்கி அந்த படத்திற்கு தமிழில் வசனம் எழுதினார். எனக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. ராஜமெளலி சார் என்னுடைய குரல் அந்த படத்திற்கு வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.
நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கோதாச்சாரி படத்தில் நடித்தவருக்கு குரல் கொடுக்க அழைத்தனர். ராஜமெளலி படத்திற்கு குரல் கொடுக்கிறோம் என்று இருந்தேன்.
வேண்டாம் என்றது ஏன்?
இரண்டு நாளில் அவரே திரும்ப அழைத்து வேண்டாம் என்று கூறிவிட்டனர். உங்கள் குரல் மிகவும் பிரபலம். நீங்கள் பேசும்போதே இது ஆர்ஜே பாலாஜி குரல் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். இது படத்தை திசை திருப்பும். எனக்கு அது அதிருப்தியாக இருந்தாலும் அவர்கள் சொன்னது சரியான விஷயம். இதையடுத்து, அவர்கள் இந்த படத்தின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைப்பு விடுத்தனர். ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் வந்தால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு ரிலீஸ்:
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நடிகர் சூர்யாவின் கருப்பு படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகிறது. எதிர்நீச்சல் படத்தில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஆர்ஜே பாலாஜிக்கு எல்கேஜி படம் நல்ல திருப்பு முனையாக அமைந்தது. பின்னர், மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி தனது திரையுலகின் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது சூர்யாவை வைத்த இவர் இயக்கியுள்ள கருப்பு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி சுப்பிரமணியன், சுவாசிகா, ஷிவாடா, சுப்ரீத் ரெட்டி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிகே விஷ்ணு, கிரண் கெளஷிக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். எஸ்ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.
ரெட்ரோ படத்திற்கு பிறகு ஓராண்டுக்கு பிறகு வெளியாகும் படம் கருப்பு. சூர்யாவிற்கு கடந்த சில படங்கள் தோல்விப்படமாக அமைந்துள்ள நிலையில், இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.