%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 %E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

Savukku Shankar: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?

69 0

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

யூடியூப்பர் சவுக்கு சங்கர் கைது

யூடியூப் பிரபலமான சவுக்கு சங்கர் கடந்த திமுக அரசுக்கு எதிராகவும், குறிப்பாக முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வந்தார். மேலும் அப்போதைய அரசுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வந்ததாக கூறி சவுக்கு சங்கர் கடந்த திமுக ஆட்சி  காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் 2 மோசடி வழக்குகளை பதிவு செய்தனர்.

இதனையடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர், உடல் நலப்பிரச்சனையை காரணம் காட்டி 12 வாரங்கள் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியே வந்தார். இதனையடுத்து தொடர் சிகிச்சைக்காக சவுக்கு சங்கர் மீதான ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மார்ச் 25ஆம் தேதி வரை ஜாமீனை நீடித்தது.

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்

இதனால் மார்ச் 25ம் தேதிக்கு பிறகு சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் திடீரென சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆந்திராவில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அடுத்தாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஓராண்டு காலம் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலையானது நீடித்தது.

குண்டர் சட்டம் ரத்து

இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சி்யில் இருந்த அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் கரூர் சம்பத்தின் போது தவெக மீது வழக்கு பதிவு செய்த போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

“தடுப்பு காவலுக்கு போதுமான காரணம் இல்லை” என ஆலோசனை வாரிய பரிந்துரைக்கு பின் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். குண்டர் ரத்து காரணமாக வேறு வழக்கு இல்லையெனில் புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கர் விடுதலையாக வாய்ப்பு உருவாகியுள்ளது.

Related Post

முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் தர்ணா போராட்டம் – மயிலாடுதுறையில் பரபரப்பு…!

Posted by - July 16, 2025 0
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ போது மனு கொடுக்க காவல்துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்த நிலையில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

Posted by - November 7, 2024 0
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என அதிமுக…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

Posted by - November 30, 2024 0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…

ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

Posted by - September 25, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *