tvkvijaycm

பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் தவெக நிர்வாகியை சேர்ப்பதா? – கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பால் சர்ச்சை

43 0

சென்னை: பள்ளி பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழு​வில் தவெக நிர்​வாகி சேர்க்​கப்​பட்​டுள்ள விவ​காரம் தற்​போது பெரும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது.

தமிழக பள்​ளிக் கல்​வி​யில் 1 முதல் பிளஸ் 2 வகுப்​பு​களுக்​கான பாடத்​திட்​டங்​களை மாற்​றியமைக்க கடந்த திமுக ஆட்​சி​யில் பேராசிரியர் சுல்​தான் அகமது இஸ்​மா​யில் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதை அடுத்​து, பள்ளி பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழுவை மாற்​றி, புதிய குழு அமைக்​கப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித் துறை நேற்று முன்​தினம் அறி​வித்​தது.

அதன்​படி இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை தலை​மை​யில் 17 பேர் கொண்ட குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த புதிய குழு​வில் தவெக செய்​தித் தொடர்​பாள​ராக உள்ள கே.எஸ்​.டி. அனந்த்ஜித் மக்​கியா உறுப்​பின​ராக இடம் பெற்​றுள்​ளார். அரசி​யல் பின்​புலம் கொண்​ட​வரை எப்​படி பாடத்​திட்​டக் குழு​வில் இடம்​பெறலாம் என்​றும், இந்த குழு​வுக்கு அனு​மதி அளித்​தது யார் எனவும் கல்​வி​யாளர்​கள், ஆசிரியர்​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். மேலும், அவரை குழு​வில் இருந்து நீக்​க​வும் கோரிக்​கைகள் வலுத்​துள்​ளன.

அதே​போல், முந்​தைய குழுத் தலை​வர் சுல்​தான் அகமது இஸ்​மா​யில் நீக்​கப்​பட்ட விவ​கார​மும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது. இதுகுறித்து பேராசிரியர் சுல்​தானிடம் கேட்​ட​போது அவர் கூறியது: ஆட்சி மாற்​றம் காரண​மாக நான் பதவி வில​கிய​தாக வெளி​யான தகவல் தவறானது. புதி​தாக தயாரித்த சில பாடநூல்​களின் பிர​தியை முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸிடம் சென்று வழங்​கினேன். அந்​தப் புகைப்​படம் ட்விட்​டரில் வெளி​யானதை வைத்​து, நான் குறிப்​பிட்ட அரசி​யல் கட்​சிக்கு (தி​முக) நெருக்​க​மானவன் என்ற தவறான எண்​ணம் உரு​வாகி​விட்​டது.

ஜெயலலி​தா, கருணாநி​தி,ஸ்டா​லின், பழனி​சாமி என பலரின் ஆட்​சி​யிலும் நான் பணி​யாற்​றி​யுள்​ளேன். எனக்கு எந்த அரசி​யல் சார்​பும் இல்​லை. புதிய தலை​வ​ராகப் பொறுப்​பேற்​ற மயில்​சாமி அண்​ணாதுரைக்கு வாழ்த்​துகள். அதே​நேரத்​தில், நாங்​கள் தொடங்​கிய சிறந்த கல்விக் கொள்​கைகளை அவர் தொடர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Related Post

கேதுவால் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்வந்த நிலையை அடையவுள்ள 3 ராசிகள்!

Posted by - December 7, 2024 0
2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்…
Generated Image November 22 2025 5 37PM

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Posted by - November 30, 2022 0
சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய…

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

Posted by - February 15, 2025 0
என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல. அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது.…

அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – சாடிய உயர்நீதிமன்றம்

Posted by - April 18, 2025 0
பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *