அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்!

295 0

அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர் தாஸ், போலீசார் தனக்கு தொல்லை கொடுத்ததாலேயே, இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்! |  Priest in Ayodhya kills self live streams suicide Facebook

கடந்த ஜனவரி மாதம் 80 வயது முதியவர் ராம் சரன் தாஸ் காணாமல் போன வழக்கில் போலீசார் ராம் சங்கர் தாஸ் மீது சில தினங்களுக்கு முன்பு தான் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ராம் சங்கர் தாஸ் இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இதனால் ராம் சங்கர் தாஸ்-ஐ தேடிய போலீசார், அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது ராம் சங்கர் தாஸ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் தற்கொலையை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ராம் சங்கர் தாஸ், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் கான்ஸ்டபில் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து கோட்வாலி காவல் நிலைய அதிகாரி மனோஜ் சர்மா கூறும் போது, “பூசாரி ராம் சங்கர் தாஸ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். போதை பழக்கம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் போலீசார் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்,” என்று தெரிவித்தார்.

மேலும், இரண்டு நாட்களாக விசாரணைக்கு ராம் சங்கர் தாஸ் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரது அறைக்குள் சென்றோம். அங்கு அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது, என்று அவர் தெரிவித்தார்.

Related Post

இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?

Posted by - August 21, 2024 0
இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?2024-25ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் பல நிறுவனங்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்…

டேட்டிங் ஆப் மூலம் உடலுறவுக்கு அழைப்பு: வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல் கைது

Posted by - August 9, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது…

கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி…உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா…?

Posted by - December 13, 2024 0
Reliance Industries Seeking Big Loan – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக…

முதலிரவில் குழந்தை பெற்ற மணப்பெண்- கனவுகளோடு காத்திருந்த கணவன் அதிர்ச்சி

Posted by - June 30, 2023 0
ஆயிரம் பொய் சொல்லி யாவது திருமணத்தை நடத்த வேண்டும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ற பழமொழி உள்ளது. இந்த பழமொழிகளை நிரூபிக்கும் வகையில் இளம்…

காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

Posted by - March 11, 2025 0
காதல்… 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *