கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

169 0

“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்”

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று 7 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது”

தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் வாரம் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்திருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக, மழை சற்று குறைந்து இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை அதன் புறநகர் பகுதியில் திடீரென மழை பெய்தது. இந்தநிலையில் இன்று தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை முன்னறிவிப்பு என்ன ?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நிலவரம் என்ன ? Kanchipuram Weather Forecast Today

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற இடங்களில், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த நிலை இந்த மாதம் 11ஆம் தேதி வரை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நிலவரம் என்ன ? Thiruvallur Weather Forecast Today

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை நேரங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் நிலவரம் என்ன ? Chengalpattu Weather Forecast Today

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பிற பகுதிகளில் வானம் மேகத் மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Related Post

தாம்பரத்தில் போலீசாரை கண்டித்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டம்

Posted by - November 29, 2022 0
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது. வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…

ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர்…

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்! கேப்டனின் உடலில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

Posted by - November 30, 2023 0
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு என்னென்ன உடல்நிலை பிரச்சினைகள் என்பது குறித்து நமக்கு கிடைத்த தகவல்களை பார்ப்போம். தொண்டர்கள், ரசிகர்களால் கேப்டன் என அன்போடு…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted by - October 15, 2024 0
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?

Posted by - December 27, 2023 0
சென்னை: கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது. சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *