Generated Image November 05 2025 10 13AM

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

213 0

“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்”

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று 7 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது”

தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் வாரம் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்திருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக, மழை சற்று குறைந்து இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை அதன் புறநகர் பகுதியில் திடீரென மழை பெய்தது. இந்தநிலையில் இன்று தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை முன்னறிவிப்பு என்ன ?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நிலவரம் என்ன ? Kanchipuram Weather Forecast Today

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற இடங்களில், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த நிலை இந்த மாதம் 11ஆம் தேதி வரை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நிலவரம் என்ன ? Thiruvallur Weather Forecast Today

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை நேரங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் நிலவரம் என்ன ? Chengalpattu Weather Forecast Today

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பிற பகுதிகளில் வானம் மேகத் மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Related Post

+2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் – அட்டவணை

Posted by - May 8, 2025 0
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், உடனடியாக துணை தேர்வு எழுதுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி…

திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

Posted by - March 13, 2025 0
திமுக தலைமயிலான தற்போதைய தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். தமிழ்நாடு அரசு பட்ஜெட்: மத்திய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து, தமிழ்நாடு…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா…? அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த விளக்கம்..!

Posted by - June 12, 2023 0
சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்…

எங்களை இணைக்காதீங்க… எங்களை இணைச்சிடுங்க: மாறுபாடான மனுக்கள் வந்த இடம் எது தெரியுங்களா?

Posted by - January 8, 2025 0
தஞ்சாவூர் மாநகராட்சியுடன் எங்கள் கிராமம் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை திட்டம் உட்பட அரசு ஏழை மக்களுக்காக அறிவிக்கும் எவ்வித திட்டங்களிலும் நாங்கள் பயன்பெற இயலாது. தஞ்சாவூர்: எங்களை…
jactojio png

அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வலியுறுத்தி மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் ஜாக்டோ-ஜியோ

Posted by - July 3, 2026 0
சென்னை: அனை​வருக்​கும் பழைய ஓய்​வூ​தி​யம் என்​பதை வலி​யுறுத்​தி, மீண்​டும் போராட்டக் களத்​துக்கு தயா​ராவ​தாக, ஜாக்டோ ஜியோ அமைப்​பின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் கு.வெங்​கடேசன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை:…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *