குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி…!!

306 0

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலியே காதலனைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார் (18) இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடையில் வேலை பார்த்து வருகிறார். தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள தன்னுடைய காதலியுடன் கொண்டாடுவதற்காக கடந்த  7 ஆம் தேதி திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.

சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சுற்றிவிட்டு ஏழாம் தேதி இரவு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தபோது அண்ணா நகரை சேர்ந்த தான் காதலித்து வரக்கூடிய 16 வயது சிறுமியை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்திருக்கிறார் சஞ்சீவ் குமார்.

இரவு 10 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 5வது நடைமேடைக்கு 16 வயது சிறுமி வந்திருக்கிறார். அப்போது சஞ்சீவ் குமாருக்கு தான் வாங்கி வந்த மாசா குளிர்பானத்தை சிறுமி கொடுத்ததாகவும், அதை குடித்த பின்னர் “என்னை மன்னித்துவிடு உன்னை பழி வாங்குவதற்காகவே உன்னை வரவழைத்து குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்தேன் என சிறுமி சஞ்சய் குமாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமி இரவு 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருப்பதை அறிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி இருவரும் நேரடியாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து சஞ்சீவ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர் இதில் சஞ்சய் குமார் பயந்துள்ளார்.

பின்னர் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி விட்டு மறுநாள் காலையில் ஆவடியில் உள்ள தன்னுடைய மாமா செல்வராஜ் வீட்டிற்கு சென்று, தனக்கு, தான் காதலித்து வரக்கூடிய பெண் விஷம் கொடுத்து விட்டதாக கூறி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்திருக்கிறார்.

அதன் பின்னர் உடல்நிலை மோசம் அடையவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கும் மிகவும் ஆபத்தான கட்டத்திலேயே சஞ்சய் குமார் இருந்துவந்திருக்கிறார். இதனிடையே சிகிச்சையில் இருந்த போது காவல்துறையினரிடம் தன்னுடைய காதலி, தனக்கு மாசா குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து விட்டதாக கூறி மரண வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

இதன் பின்னர் சஞ்சீவ் குமாரை  தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்துக் கொள்வதாக கூறி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து, நேற்று அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சஞ்சீவ் குமாரின் உடலானது அவருடைய சொந்த ஊரான பரமக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Related Post

அபாரமான சாதனை…ரஜினி..கமல்..உதயநிதி.. அஜித்துக்கு குவியும் வாழ்த்து!

Posted by - January 13, 2025 0
“இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான தருமணம் மட்டுமல்லாமல் பெருமைமிகு தருணம்” என பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து…

ஆந்திரா ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு, தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி- ரெயில்கள் ரத்து

Posted by - October 30, 2023 0
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே…

இமாச்சலில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழப்பு

Posted by - July 13, 2023 0
சிம்லா: தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில…

paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

Posted by - November 28, 2022 0
3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில்…

நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?

Posted by - February 25, 2026 0
சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான நல்லகண்ணு இன்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் மருத்துவ படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது. Communist…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *