கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் – கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்

214 0

வங்கிகள் விநியோகம் செய்யம் கிரெடிட் கார்ட்களின் பின்னணியில் உள்ள பலரும் அறியாதா, வியாபார திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

வங்கிகளின் லாபத்தின் ஆதாரமாக கிரெடிட் கார்ட்கள் உள்ளன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

கிரெடிட் கார்ட்:

இந்தியாவில் மக்கள் தங்கள் பெயர்களில் கிரெடிட் கார்ட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் கிரெடிட் கார்ட்கள் மூலம் கடன் வாங்கி அத்தியாவசிய தேவைகள் உட்பட பலவற்றிற்காக செலவு செய்கின்றனர். எப்போதாவது ஏன் வங்கிகள் தாமாக முன்வந்து கிரெடிட் கார்டை வழங்குகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா? உண்மையில், கிரெடிட் கார்டு வங்கிக்கு ஒரு பெரிய வருமான ஆதாரமாகும். இது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மேலும் மேலும் செலவு செய்ய ஊக்குவிக்கிறது.

கூவி கூவி விற்பனை:

கிரெடிட் கார்ட் என்பது ஒரு காலத்தில் அதிக வருமானம் கொண்டவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என கருதப்பட்டது. ஆனால், இன்று பெரும்பாலான நடுத்தர மக்கள் கைவசம் கிரெடிட் கார்ட்கள் உள்ளன. காரணம் வங்கிகள் அதற்கான விதிகளை கடுமையாக தளர்த்தி, பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரம் காட்டுகின்றன. செல்போன் மூலம் மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு, கிரெடிட் கார்ட்டை பயன்படுத்துமாறு தூண்டிவிடுகின்றன. பொதுஇடங்களில் கூட பல வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு, கிரெடிட் கார்ட்கள் விநியோகிக்கப்படுகின்றன. கிரெடிட் கார்ட்கள் மூலம் கனவுகள் நிறைவேறுவதாகவும், அது ஒரு அத்தியாவசிய பொருள் என்பது போலும் முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன. வாழ்நாள் முழுவதும் இலவசம் என ஆசை வார்த்தைகளை கூறியும், பல வங்கிகள் கிரெடிட் கார்ட்களை பொதுமக்கள் தலையில் கட்டுகின்றன.

கிரெடிட் ஸ்கோர் முக்கியம்பா..!

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, ​​கடன் பயன்பாட்டு விகிதத்தை நீங்கள் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். அதாவது, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பில் ஒரு மாதத்தில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள். இது கிரெடிட் ஸ்கோரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் பெற, குறைந்த கடன் பயன்பாட்டு விகிதத்தைக் கொண்டிருப்பது அல்லது 30 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பது நல்லது.

வங்கிகளின் லாப ஆதாரம்:

வங்கிகள் கிரெடிட் கார்டுகளில் பெரிய அளவில் பந்தயம் கட்டி, அதை உங்களுக்கு மேலும் மேலும் வழங்குகின்றன. ஏனென்றால் வங்கிகள் வட்டி விகிதங்கள், வருடாந்திர கட்டணங்கள், மறு வெளியீட்டு கட்டணங்கள், வணிகர் கட்டணங்கள் போன்ற வடிவங்களில் கிரெடிட் கார்டுகளிலிருந்து லாபம் ஈட்டுகின்றன. இது தவிர, கிரெடிட் கார்டு பில் சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், நிலுவைத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். சில நேரங்களில் தாமதமாக செலுத்தும் கட்டணங்களும் வட்டியுடன் சேர்க்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் பரிமாற்றக் கட்டணங்கள் வடிவில் வங்கி லாபம் ஈட்டுகிறது. இந்தியாவில் கிரெடிட் கார்டு வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜனவரி 2025 இல் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கிரெடிட் கார்டில் வங்கி சலுகைகள்

வங்கிகள் வாடிக்கையாளர்களை வெகுமதி திட்டங்கள், கேஷ்பேக், விமான பயணத்தில் தள்ளுபடிகள், இலவச லவுஞ்ச் அணுகல் போன்ற பல்வேறு சலுகைகள் மூலம் ஈர்க்கின்றன. எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, பல நேரங்களில் மக்கள் கிரெடிட் வரலாற்றை உருவாக்க அல்லது தங்கள் கிரெடிட் ஸ்கோர் நிர்வகிக்க கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

Related Post

இனி நோக்கியா ஆண்ட்ராய்டு ஃபோன்களை வாங்க முடியாதாம்.. ஏன் தெரியுமா?

Posted by - January 16, 2025 0
இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற…

‘பிரபலங்களுடன் தொடர்பு’ – கைதான ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்ததாக என்சிபி தகவல்

Posted by - March 9, 2024 0
புதுடெல்லி: சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB – என்சிபி) அதிகாரிகள்,…

முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

Posted by - September 4, 2024 0
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…

UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவா?

Posted by - April 19, 2025 0
– மத்திய நிதியமைச்சகம் மறுப்பு! 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என…

ChatGPT எப்படி நமக்கு உதவும்?ChatGPT AI – உங்கள் கையிலும் இப்போது!

Posted by - December 20, 2025 0
இன்றைய டிஜிட்டல் உலகில், Artificial Intelligence (AI) ஒரு முக்கிய கருவியாக வளர்ந்து வருகிறது. அதில் ChatGPT ஒரு பிரபலமான AI மெஷின் ஆகும். தமிழர்கள் குறிப்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *