முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

180 0

பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய பங்கின் விலை 990 ரூபாயாக அதிகரித்தது. அதுவே பிஎஸ்இ சந்தையில் ரூ.991 என்ற விலை பட்டியலிடப்பட்டுள்ளது.

அதுவே க்ரே மார்க்கெட்டில் இந்த பங்கின் விலை 100% பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. இது அதிகாரப்பூர்வமான சந்தை கிடையாது.

பிரீமியர் எனர்ஜிஸின் ஐபிஓ முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான முதலீட்டை பெற்றுள்ளது. நிறுவனம் சாராத முதலீட்டாளர்களின் முதலீடு சந்தா விகிதம் 74 மடங்கு அதிகமாக இருந்தது.

இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி ஹைதராபாத்தில் 4 ஜிகாவாட் சோலார் பிவி டாப்கான் செல் மற்றும் 4 ஜிகாவாட் சோலார் பிவி டாப்கான் மாட்யூல் உற்பத்தி வசதியை நிறுவுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் , துணை நிறுவனமான பிரிமியர் எனர்ஜிஸ் குளோபலில் முதலீடு செய்ய நிகர வருமானத்தைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள நிதி பொது நிறுவன நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

பிரீமியர் எனர்ஜிஸ் 2023-24ம் நிதியாண்டின் இறுதியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒருங்கிணைந்த நிறுவனமாக இருந்தது. செல் உற்பத்திக்கான வருடாந்திர நிறுவப்பட்ட திறன் 2 GW மற்றும் தொகுதி உற்பத்தி 4.13 GW ஆகும். 2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு சூரிய மின்கலங்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய இந்திய நிறுவனமாகவும் இது உள்ளது.

நிறுவனம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐந்து உற்பத்தி வசதிகளை வைத்துள்ளது. மேலும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எட்டு துணை நிறுவனங்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகிறது.

புதிய 4 GW TOPCon சோலார் செல் லைன் உட்பட, நிறுவனத்தின் கணிசமான முதலீடுகள், மற்றும் மூலதனத்தின் மீதான அதன் மேம்பட்ட வருமானம் 2022ம் நிதியாண்டில் 3.6% ஆக இருந்து. 2023-24ம் நிதியாண்டில் 25.6% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது.இந்தியாவின் மாட்யூல் உற்பத்தி திறன் 2024 நிதியாண்டில் தோராயமாக 72 ஜிகாவாட்டை எட்டியது. தற்போதைய சூரிய மின்கல உற்பத்தி திறன் 8.1 ஜிகாவாட் ஆகும். இது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய், 2020-21ம் நிதியண்டில் முதல் 2022-23 வரை 42.71% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இருந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் வருவாய் 120% அதிகரித்து ரூ.3,143 கோடியாக இருந்தது. 24ஆம் நிதியாண்டில் ரூ.231 கோடி லாபம் ஈட்டியது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு ரூ.13.3 கோடி நஷ்டம் அடைந்திருந்தது.

Related Post

கள்ளக்காதலனுக்கு பிறந்த குழந்தையை மூச்சு திணறவைத்து கொடூரமாக கொன்ற பெண்

Posted by - July 29, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்தவர் ஜூலி (வயது 40). இவரது கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஜூலி…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில்…

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்: கார்கே கண்டனம்..!!

Posted by - February 16, 2024 0
காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் போராடுவார்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சர்வாதிகாரத்தின்…

மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

Posted by - July 3, 2023 0
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால்…

AI துறையில் பெருகும் வேலை வாய்ப்பு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted by - December 14, 2024 0
இளைஞர்கள் மத்தியில் சேர்க்கை நுண்ணறிவு துறை அதிக வரவேற்பை பெற்று வருகிறது இப்போது AI இன்ஜினியரிங் துறையில் சிறந்த வேலைகள் எவை மற்றும் அதில் எவ்வளவு சம்பளம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *