ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் : ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைது

141 0

ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன் ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி இவரது மனைவி விஜயகுமாரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.ஜோதிடர் ஸ்டீபன், நம்பிராஜன், கலையரசி

இதைத்தொடர்ந்து ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில், கலையரசி பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ ஜோதிடர் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்த பிறகும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று தெரிகிறது.மேலும், தான் கட்டணமாக செலுத்திய ஒன்பதரை லட்சம் ரூபாயை ஸ்டீபன் திருப்பித் தர மறுத்ததால் முகநூல் மூலம் பழகிய நம்பிராஜனுடன் சேர்ந்து ஸ்டீபனை, துணியால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கலையரசி மற்றும் நம்பிராஜனை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Related Post

நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - May 29, 2025 0
சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான…

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Posted by - June 20, 2023 0
தென்காசி: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழை காலங்களில்…

“அட கடவுளே” நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில்.. AK-க்கு என்னாச்சு..? நாளை Birthday வாச்சே..!

Posted by - April 30, 2025 0
பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கு சென்றிருக்கும் அஜித்குமாருக்கு என்ன…

இரவு நேரத்துல நெஞ்செரிச்சல் ரொம்ப தொல்லை பண்ணுதா? இப்படி பண்ணுங்க அந்த பிரச்சினையே வராது…!

Posted by - December 21, 2023 0
ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) என்றும் அழைக்கப்படும் இரவுநேர நெஞ்செரிச்சல், அசௌகரியமாகவும் தூக்கத்தை சீர்குலைக்கும். பொதுவாக நெஞ்செரிச்சல் அதிக அமில உணவுகளை சாப்பிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *