ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் : ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைது

140 0

ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன் ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி இவரது மனைவி விஜயகுமாரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.ஜோதிடர் ஸ்டீபன், நம்பிராஜன், கலையரசி

இதைத்தொடர்ந்து ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில், கலையரசி பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ ஜோதிடர் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்த பிறகும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று தெரிகிறது.மேலும், தான் கட்டணமாக செலுத்திய ஒன்பதரை லட்சம் ரூபாயை ஸ்டீபன் திருப்பித் தர மறுத்ததால் முகநூல் மூலம் பழகிய நம்பிராஜனுடன் சேர்ந்து ஸ்டீபனை, துணியால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கலையரசி மற்றும் நம்பிராஜனை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Related Post

தாம்பரத்தில் போலீசாரை கண்டித்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டம்

Posted by - November 29, 2022 0
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது. வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…

லாக்கப் மரணம்; விஜய்- முதலமைச்சர் என்று குறிப்பிடாமல் உள்துறை அமைச்சர் என்றே மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

Posted by - July 1, 2025 0
சிவகங்கை காவல்துறை மரணத்தில் திமுக அரசை அராஜக அரசு என்றும், சிறப்பு விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை…

குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொள்ளாமல் கட்டுப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்..!

Posted by - June 18, 2025 0
நீங்கள் எப்பேர்ப்பட்ட நல்ல சூழலில் உங்கள் குழந்தையை வளர்த்தாலும் சரி, கெட்ட அல்லது மோசமான வார்த்தைகளை அவர்கள் கற்று கொள்வதை உங்களால் முற்றிலும் தடுக்க முடியாது என்பதே…

ஒரே மாசத்துல உங்க உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த 5 விஷயத்தை டெய்லி ஃபாலோ பண்ணுங்க..!

Posted by - November 29, 2023 0
உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. யாராலும் எளிதாக உடல் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைப்பதற்கு சீரான உணவுகள், உடற்பயிற்சி…

போதையால் சீரழிந்த THALAPATHY VIJAY-உடன் நடித்த நண்பன் போதையால் உள்ளே தள்ளிய போலீஸ் – நடந்தது என்ன?

Posted by - June 23, 2025 0
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் மோதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *