ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் : ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைது

142 0

ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன் ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி இவரது மனைவி விஜயகுமாரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.ஜோதிடர் ஸ்டீபன், நம்பிராஜன், கலையரசி

இதைத்தொடர்ந்து ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில், கலையரசி பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ ஜோதிடர் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்த பிறகும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று தெரிகிறது.மேலும், தான் கட்டணமாக செலுத்திய ஒன்பதரை லட்சம் ரூபாயை ஸ்டீபன் திருப்பித் தர மறுத்ததால் முகநூல் மூலம் பழகிய நம்பிராஜனுடன் சேர்ந்து ஸ்டீபனை, துணியால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கலையரசி மற்றும் நம்பிராஜனை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Related Post

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

Posted by - September 30, 2024 0
தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி…

சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 20, 2022 0
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…

கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

Posted by - November 21, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர்…

பிரபல யூடியூபர் இர்பானுக்கு கருணை காட்டாதீங்க.. கொந்தளித்த பிரபலம்

Posted by - May 28, 2024 0
ரபல யூடியூபர் இர்பான் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் சிசு ஆணா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *