நீ யாருயா அத சொல்ல? ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்த ஈரான், சைலண்ட் மோடில் இஸ்ரேல்

174 0

இஸ்ரேலுடன் தற்போது வரை எந்தவித போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, இஸ்ரேல் தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

”போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லை”

அமெரிக்காவின் முயற்சியால் ஈரான் – இஸ்ரேல் இடையேயான 12 நாள் மோதல் முடிவுக்கு வருவதாகவும், இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்த, போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என ஈரன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படுமா? அல்லது தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் சொல்வது என்ன?

ஈரான் வெளியிறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளபடி: இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை நடத்தியது. இப்போதைக்கு, போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த “உடன்பாடும் ” ஏற்படவில்லை. இருப்பினும், இஸ்ரேலிய ராணூவம் ஈரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனால், அதுவரை எங்கள் ராணுவம் தீவிரமாக பதிலடி அளிக்கும்” என விளக்கமளித்துள்ளார். இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் சொல்வது என்ன?

போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பாக கருத்து சொல்ல இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அல்லது அவரது அலுவலகம் சார்பிலும் கூட எந்தவித கருத்தும் பகிரப்படவில்லை. ஈரானின் மறுப்பும், இஸ்ரேலின் அமைதியும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதா? என்பதை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட நாடுகள் என்ன முடிவை எடுக்கப்போகின்றன என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Related Post

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சி இழைக்கும் பெரும் அநீதி! முன்னாள் எம்.பி ஆவேசம்

Posted by - November 22, 2025 0
தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள்…

அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்

Posted by - September 8, 2025 0
சென்னை: வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் நேற்று நிகழ்ந்​தது. கிரகணத்​தின்​போது, அழகிய சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட சந்​திரனை ஏராள​மானோர் உற்​சாகத்​துடன் பார்த்து மகிழ்ந்​தனர். சூரியன், சந்​திரன், பூமி…

ட்ரம்பின் வரிகள் சட்டவிரோதமானது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.. ”கேன்சல் பண்ணிட்டா..” வார்னிங்

Posted by - August 30, 2025 0
அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் ரத்து செய்யப்பட்டால் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என,…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Posted by - February 20, 2023 0
சியோல்: உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உத்தரவின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *