நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

244 0

நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3 ஆசிட் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.#TirupatiLaddus #TirupatiControversy

நெய் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்று, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3 ஆசிட் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. தற்போது பெரும்பாலானோர் கடைகளில் கிடைக்கும் நெய்யை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த நெய் சுத்தமானதா அல்லது கலப்படம் செய்ததா? என்ற சந்தேகம் நாம் அனைவருக்கும் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள எளிமையான சோதனைகள் போதுமானது. அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

உப்பு சோதனை : நமது அனைவரது சமையலறையில் உப்பு கண்டிப்பாக இருக்கும். இதில் ஒரு ஸ்பூன் உப்பு போதும் உங்கள் கையில் உள்ளது நல்ல நெய்யா? அல்லது போலியானதா என கண்டறிய… ஒரு கிண்ணத்தில் நீங்கள் சோதனை செய்து பார்க்க நினைக்கும் நெய்யை எடுத்து கொள்ளுங்கள். இதில் ஒரு சிட்டிகை அளவு ஹைட்ரோகுளோரிக் ஆசிட் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் இதில் சிவப்பு நிறம் மாறி இருந்தால் உங்கள் நெய் கலப்படம் என்றும் இல்லையென்றால் கலப்படம் இல்லாதது என்றும் கண்டறியலாம்.

தண்ணீர் சோதனை ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் வைத்திருக்கும் நெய்யில் இருந்து ஒரு சொட்டு எடுத்து உள்ளே விடுங்கள். நெய் தண்ணீரில் மிதந்தால் அது கலப்படமற்றது. மாறாக தண்ணீரில் கலந்தால் அது கலப்படம் செய்தது என தெரிந்து கொள்ளுங்கள். இதேபோல ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சிறிதளவு நெய் சேர்த்து அப்படியே வைத்து விடுங்கள். சிறிது நேரத்திற்கு பின்னர் தண்ணீரின் மீது ஒரு லேயர் படர்ந்து இருந்தால் கலப்படமானது என அறியலாம்.

உள்ளங்கை சோதனை : ஒரு ஸ்பூன் நெய்யை எடுத்து உங்களது உள்ளங்கையில் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கையால் நன்கு தேய்த்து அதனை முகர்ந்து பாருங்கள். சுத்தமான நெய் என்றால் அதனை வாசனையே நன்கு தெரியும். அதேபோல நாம் நன்கு தேய்த்த பின்னர் நிறமற்றதாக இருந்தால் கலப்படமானது என அறியலாம்.

சுத்தமான நெய்யை வீட்டில் தயார் செய்வது எப்படி? ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பாலை எடுத்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். ஆடை பிரிந்து வரும் வரை நன்கு காய வைத்து பின்பு ஆற வைக்க வேண்டும். இந்த பாலாடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொண்டே வாருங்கள். இதனை பிரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும். ஒரு வாரம் கழித்து நீங்கள் சேகரித்து வைத்துள்ள பாலாடை வெண்ணெய் போல மாறி இருக்கும். இதனை எடுத்து குளிர்ந்த தண்ணீர் சேர்த்து அரைத்தால் வெண்ணெய் நன்கு பிரிந்து வரும். இந்த வெண்ணெய்யை எடுத்து மிதமான சூட்டில் சூடு செய்தால் நெய் தயார். இதில் சீரகம் சேர்த்தால் வாசனை நன்றாக இருக்கும். இதன் நெய்யை ஒரு பாட்டிலில் வைத்து பயன்படுத்தினால் கெடாமல் இருக்கும்.

Related Post

வன்முறை நீடித்து வரும் நிலையில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர்கள்

Posted by - July 25, 2023 0
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு…

ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

Posted by - September 13, 2023 0
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன்…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

Posted by - November 28, 2022 0
3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில்…

ஓணம் லாட்டரியால் அடித்தது அதிர்ஷ்டம்: திருப்பூரை சேர்ந்த 4 பேர் ரூ.25 கோடிக்கு அதிபதியானார்கள்

Posted by - September 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *