ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

262 0

பெங்களூரு:

தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்த கூப்பன்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் இணையதளத்தின் சர்வரை முடக்கி தங்கம், வெள்ளி, மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி மர்ம நபர் ஒருவர் மோசடி செய்தார்.இரட்டிப்புத் தொகை தருவதாக கூறி நாகையில் மீனவர்களிடம் ரூ.8.14 கோடி மோசடி -  நிதி நிறுவன இயக்குநர்கள் தலைமறைவு | 8.14 Crore fraud to fishermen in Nagai  by claiming ...

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் சார்பில் தென்கிழக்கு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தனியார் வங்கியின் தொடர்புடைய இணையதளத்தின் சர்வரை முடக்கி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த லட்சுமிபதி (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் கணினி அறிவியலில் பி.டெக் படித்துள்ள லட்சுமிபதி ஹேக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி, வாடிக்கையாளர்களின் பரிசுக்கூப்பன்களை திருடி பொருட்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் பரிசுக்கூப்பன்களுக்கு வழங்கப்படும் வெகுமதி புள்ளியை (ரிவார்டு பாயிண்ட்) பணமாக மாற்றி உள்ளார்.

இந்த கூப்பன்களை கணிசமான அளவு டிஜிட்டல் கரன்சியாக மாற்றியுள்ளார். இதில் அவர் வாங்கி குவித்த 5 கிலோ தங்க நகைகள், தங்க கட்டிகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள், ரூ.11 லட்சம் ரொக்கம் என ரூ.4¼ கோடி பொருட்களை போலீசார் மீட்டனர். இதுமட்டுமல்லாது லட்சுமிபதிக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்த ரூ.29 லட்சம் முடக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் லட்சுமிபதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். ஹேக்கர் லட்சுமி பதியிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார். இது குறித்து போலீஸ் கமிஷனர் கூறுகையில் பெங்களூருவில் இயங்கி வந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி ரூ.4.¼ கோடி பொருட்களை வாங்கி மோசடி செய்த ஆந்திர ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது இதற்கு முன்பு பெங்களூருவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுவே முதல் வழக்கு ஆகும். இவர் துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். அதில் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்ட அவர் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

Related Post

குழந்தைகள் ஜாக்கிரதை – வேகமாக பரவும் பொன்னுக்கு வீங்கி – நோய்க்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பது எப்படி?

Posted by - February 8, 2025 0
தமிழ்நாட்டில் மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம், தடுப்பது எப்படி மற்றும் சிகிச்சை…

முழு சுதந்திரம் கொடுத்த மோடி.. இறங்கி அடிக்க தயாராகும் இந்திய ராணுவம்.. உத்தரவு என்ன.?

Posted by - April 30, 2025 0
பிரதமர் தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி போட்ட உத்தரவு என்ன தெரியுமா.? கடந்த 22-ம் தேதி…

புதிய ஜிஎஸ்டி வரியால் புது வீடு கட்டுவது சுலபம்.. சிமெண்ட் முதல் மார்பில் வரை! மொத்தமாக குறையும் விலை

Posted by - September 4, 2025 0
சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28% சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது…

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள்

Posted by - August 12, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *