மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

175 0

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் மகளிருக்கான திட்டங்கள்:

ஒரு சமூகத்தில் வளர்ச்சி என்பதை அந்த சமூகத்தில் வாழும் பெண்களின் வளர்ச்சியை பொறுத்துதான் என்பது டாக்டர் அம்பேத்கரின் கூற்று. தமிழக அரசும் அதை நோக்கியே பல்வேறு நலத்திட்ட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் கோப்பிலேயே முதலாவதாக கையெழுத்திட்டார். அதைதொடர்ந்து, தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000, பள்ளி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தோழி விடுதிகள் என பெண்கள் வளர்ச்சிக்கு அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடைமுறைத்தி வருகிறது.

மகளிருக்கு மேலும் ஒரு சலுகை:

தமிழ்நாடு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில், மகளிர் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். இலவச பயண வசதி பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி உள்ளதாகவும், அடுத்தவரை சார்ந்து இருக்கும் சூழலை தவிர்க்க உதவுவதாகவும் அரசு தெரிவித்து வருகிறது. இதை குறிப்பிட்டு தனது தலைமையிலான அரசு, மகளிருக்கான அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டி வருகிறார். அதேநேரம், பெண்கள் கையில் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு இலவசம் பயணம் கிடையாது. எடைக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் தான், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கட்டணமின்றி இலவசமாக கொண்டு செல்லலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கண்காட்சிக்கான பொருட்கள், விளைபொருட்களை எடுத்துச் செல்ல உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்த, அவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லக்கேஜ் உடன் இலவசமாக பயணிக்கலாம்..!

போக்குவரத்துதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 100 கிலோ மிட்டர் தூரம் பயணிக்கும் பேருந்துகளில் 25 கிலோ வரையிலான பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கொண்டு செல்லும் லக்கேஜுக்கு கட்டணம் கிடையாது.

மகளிர் சுய உதவிக் குழு பெண்களை மரியாதை குறைவாக நடத்தாமல் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்களுக்கும், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள், பேருந்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக உள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என பயணிகளுக்கும் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

இது மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த உதவுவதோடு, கைகளில் பணம் சேரவும் ஊக்குவிக்கும். இதன் மூலம் பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை சுயமாகவே பூர்த்தி செய்துகொள்ள முடியும். அடுத்தவரை நாடவேண்டும் என்ற சூழலும் தவிர்க்கப்படும்.

Related Post

கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

Posted by - August 29, 2024 0
அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட்…

இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்

Posted by - November 22, 2023 0
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அடுத்த கட்டமாக…

பச்சை நிறமே.. ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை, ஒக்கேனக்கல்! சூப்பராக மாறப்போகும் 7 சுற்றுலா தலங்கள்

Posted by - November 18, 2023 0
சென்னை: குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்லக்கூடிய மலைவாசஸ்தலங்களான ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு…

பொதுமக்களே கவனம்… அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்…

Posted by - September 26, 2023 0
சென்னை: நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:- செப்டம்பர் 30-ந்தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு…

பிறந்தது டிசம்பர்… இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.!

Posted by - December 1, 2022 0
பலர் தங்களது முக்கியமான பணிகளை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *