மருத்துவ குணம் மிகுந்த நீலகிரி பூண்டுக்கு அமோக கிராக்கி: கிலோ ரூ.140-க்கு கொள்முதல்

256 0

அரவேணு:

கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூண்டுகளை பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் கொண்டது. எனவே நீலகிரி பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.கொரோனாவால் நீலகிரி பூண்டுக்கு மவுசு அதிகரிப்பு | Nilgiri garlic people and  merchants wanted

கோத்தகிரியில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால், பூண்டு பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளன. இதற்கு போதிய கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறுகையில், நீலகிரியில் முதல் போகத்தில் அறுவடையாகும் பூண்டு, சமையலுக்கு மட்டும் உகந்தது.

2-ம் போகத்தில் அறுவடையாகும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே 2-ம் போகத்தில் விளையும் பூண்டு விதைகளை, நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். நீலகிரி பூண்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.30 மட்டுமே கொள்முதல் விலை கிடைத்தது.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் நடவு செய்யப்பட்ட பூண்டுக்கு, தற்போது ரூ.120 முதல் ரூ.140 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. நீலகிரி பூண்டுக்கான கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

 

 

 

 

 

Related Post

இந்த விழாவுக்கு அசுரன் பட டயலாக் முக்கிய காரணம் – மேடையில் விஜய் அதிரடி

Posted by - June 17, 2023 0
மாணவர்களை சந்திக்கும் நிகழ்வில் நடிகர் விஜய் தனுஷின் அசுரன் பட வசனத்தை மேற்கோள்காட்டினார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று…

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - November 26, 2022 0
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர்…

மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

Posted by - January 16, 2025 0
இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை நிற்க வைத்த அமைச்சர் மூர்த்தி! திமுகவின் மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று…

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - November 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?

Posted by - December 27, 2023 0
சென்னை: கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது. சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *