மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன… அமைச்சர் மா.சுப்ரமணியன்

210 0

தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் H1N1 இன்புளுயன்சா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல் பற்றிய அச்சம் வேண்டாம் என்றும், தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது மக்களை அச்சுறுத்தி வருகிறது இன்புளுயன்சா காய்ச்சல். இந்த காய்ச்சலில், இன்புளுயன்சா ஏ H1N1, இன்புளுயன்சா ஏ H3N2, இன்புளுயன்சா பி விக்டோரியா என 3 வகைகள் உள்ளன.

மார்ச் 9ஆம் தேதி வரை, நாடு முழுவதும் 3,038 பேருக்கு H3N2 உள்ளிட்ட இன்புளுயன்சா வகை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் ஜனவரியில் 1,245 பேருக்கும், பிப்ரவரியில் 1,307 பேருக்கும் மார்ச் மாதத்தில் 486 பேருக்கும் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதி வரை, 955 பேருக்கு இன்புளுயன்சா ஏ H1N1 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 545 பேர் பேருக்கும், மகாராஷ்டிராவில் 170 பேருக்கும், கேரளாவில் 42 பேருக்கும், பஞ்சாப்பில் 28 பேருக்கும் பாதிப்பு இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பின்பற்றியபோது போன்ற தடுப்பு வழிமுறைகளை தற்போது கடைபிடிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் முகாம்களை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம், 2,663 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்புளுயன்சா பாதிப்பு உள்ளவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு இன்புளுயன்சா ஏ H1N1 பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தேவையான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post

சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை : ஓட்டுநர் கைது!

Posted by - February 18, 2025 0
தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவோணம்…

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Posted by - June 7, 2025 0
மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து…

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் அதிரடி

Posted by - November 6, 2023 0
எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது – நீதிபதி. சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர்…

பிரபல யூடியூபர் இர்பானுக்கு கருணை காட்டாதீங்க.. கொந்தளித்த பிரபலம்

Posted by - May 28, 2024 0
ரபல யூடியூபர் இர்பான் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் சிசு ஆணா…

மீண்டும் மதன் ரவிச்சந்திரன்; ‘ஸ்டிங் மேளா’ வீடியோக்களால் பரபரப்பு!

Posted by - March 16, 2023 0
ஓராண்டுக்கும் மேலான இடைவெளியில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இம்முறை ’ஸ்டிங் மேளா’ என்ற பெயரில் அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் பலரின் வயிற்றில் புளி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *